• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புரட்சியை ஏற்படுத்தும் இந்திய ரயில்வே

புரட்சியை ஏற்படுத்தும் இந்திய ரயில்வே

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/28
in இலங்கை
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

தேசத்தின் உயிர்நாடி என்று அடிக்கடி குறிப்பிடப்படும் இந்திய ரயில்வே, அதன் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கும் மேம்படுத்துவதற்குமான பயணத்தைத் தொடங்கியுள்ளது.

இந்த நவீனமயமாக்கல் இயக்கத்தின் குறிப்பிடத்தக்க அம்சம், ‘அமிர்த பாரத்’ என்ற கருப்பொருளின் கீழ் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பாகும்.

இந்தியாவின் இந்த இலட்சிய முயற்சியானது, பிராந்தியத்துக்கே முன்னுதாரணமாகத் திகழ்வதோடு, வினைத்திறனான போக்குவரத்து மையங்களாக மட்டுமல்லாமல், இந்தியாவின் வளமான கலாசார பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் ரயில் நிலையங்களை அமைத்துக்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

‘அம்ரித் பாரத்’ கருப்பொருளின் கீழ், இந்திய ரயில் நிலையங்கள் அழகியல், வசதிகள் மற்றும் செயல்பாடுகளில் கவனம் செலுத்தி விரிவான மாற்றத்திற்கு உட்பட்டு வருகின்றன.

தேசத்தின் பன்முகத்தன்மை மற்றும் வரலாற்றைப் பிரதிபலிக்கும் கூறுகளை இணைத்துக்கொண்டு பயணிகளுக்கு தடையற்ற பயண அனுபவத்தை வழங்கும் நிலையங்களை உருவாக்குவதே இலக்காகும்.

அத்தோடு, பல ரயில் நிலையங்கள் பாரம்பரிய இந்திய கட்டிடக்கலை பாணிகளை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன, அல்லது மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, வருகின்றன.

ரயில் சேவையின்போது பயணிகளுக்கான காத்திருப்பு அறைகள், ஓய்வறைகள், உணவு விடுதிகள் மற்றும் பயணச்சீட்டு வழங்கும் பகுதிகள் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்திதொரு பகுதியாக, இந்தியா முழுவதும் 508 ரயில் நிலையங்களை மறுசீரமைப்புச் செய்வதற்கு, 3பில்லியன் டொலர்கள் பெறுமதியான திட்டத்தினை அங்குராட்பணம் செய்துள்ளார்.

வளர்ச்சி இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்தியா, அமிர்த காலத்தின் (பொற்காலம்) தொடக்கத்தில் உள்ளது. புதிய ஆற்றல் புதிய உத்வேகம், புதிய தீர்மானங்கள், மூலமாக தற்போது இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள 1300 முக்கிய ரயில் நிலையங்கள் இப்போது அம்ரித் பாரத் ரயில் நிலையமாக உருவாக்கப்படவுள்ளன. அவை நவீன முறையில் மீண்டும் மேம்படுத்தப்படவுள்ளதோடு அவற்றில் 508 அம்ரித் பாரத் ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

508 ரயில் நிலையங்களில் உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 55, பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 37, மத்தியப் பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத் மற்றும் தெலுங்கானாவில் தலா 21 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். ,ஜார்கண்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18, ஹரியானாவில் 15 மற்றும் கர்நாடகாவில் 13 நிலையங்கள் உள்ளடங்குகின்றன.

அத்தோடு இத்திட்டம் புத்துயிர் பெற்ற ரயில் நிலையங்களின் பொருளாதார திறனையும் அங்கீகரிக்கிறது. சில்லறை விற்பனை நிலையங்கள், கலைக்கூடங்கள் மற்றும் கலாசார மையங்கள் போன்ற வணிக நடவடிக்கைகளுக்கான இடங்களை உருவாக்குவதன் மூலம், இந்த நிலையங்கள் உள்ளுர் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் செயற்பாடுகள் நிறைந்த மையங்களாக மாறவுள்ளன.

இந்த இலட்சிய முன்முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால், பயண அனுபவத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் கலாசார மற்றும் உள்கட்டமைப்பு நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையை இந்திய ரயில்வே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அஸ்வெசும கொடுப்பனவு : 5 பில்லியனை விடுவித்தது திறைசேரி

Next Post

விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேரர்கள் போராட்டம்!

Related Posts

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாய வர்த்தகர்களுக்கு தலா ரூ. 150,000 அபராதம்!

2026-08-09
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
இலங்கை

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

2026-08-09
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!
இலங்கை

சிறைச்சாலை மோதல்கள் குறித்து ஆராயத் தொடர்புடைய தலைவர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

2026-08-09
நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
இலங்கை

நாட்டில் 90,000-ஐ நெருங்கும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை: ஆகஸ்ட் முதல் 8 நாட்களில் 4,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

2026-08-09
எட்டாவது வாரமாகவும் பலாலியில் போராட்டம்!
இலங்கை

எட்டாவது வாரமாகவும் பலாலியில் போராட்டம்!

2026-08-09
கதிரையில் இருந்து தவறிவிழுந்து கிளிநொச்சியில் குழந்தை உயிரிழப்பு!
இலங்கை

வெலிகம மணல்கம கடலில் சர்ஃபிங் விளையாடிய துனிசிய சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு!

2026-08-09
Next Post
விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேரர்கள் போராட்டம்!

விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேரர்கள் போராட்டம்!

காதலியை குக்கரால் தாக்கி கொடூர கொலை செய்த காதலன்

காதலியை குக்கரால் தாக்கி கொடூர கொலை செய்த காதலன்

சீனக் கப்பலால் இராஜதந்திர பதற்றத்துக்குள் இலங்கை

சீனக் கப்பலால் இராஜதந்திர பதற்றத்துக்குள் இலங்கை

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.