கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவருக்கு நஞ்சு கலந்த பால் வழங்கிய சம்பவம் தொடர்பாக 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலஹா, தெல்தோட்டை பகுதியில் வீடொன்றில் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே குறித்த சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 7 ஆம் திகதி, ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர்கள் இருவரை சந்திக்கச் சென்ற ஒருவர், அவர்களுக்கு சயனைட் கலக்கப்பட்ட 2 பால் பக்கற்றுகளை வழங்கியுள்ளார்.
அதனை அருந்தியதை அடுத்து சுயநினைவிழந்த குறித்த இரு சந்தேக நபர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற நிலைலேயே நேற்றைய தினம் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.















