நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியின் போக்குவரத்தானது முற்றாக தடைப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் மண்மேடு சரிவு மற்றும் பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியின் வெலிகொடவத்தை பகுதியில் இன்று (29) அதிகாலை 2.00 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
மேலும், நாவலப்பிட்டியின் பல பிரதேசங்களில் மண் மேடுகளுடன் பல மரங்கள் மின்கம்பிகள் மீது விழுந்துள்ளதால் அப் பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.