அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டி கடற்பகுதியில் நீராடச் சென்ற மூவர் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளனர்.
கிறிஸ்துமஸ் தினமான நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 15, 18 மற்றும் 38 வயதுடைய சங்கமன்கண்டி, உமிரி கிராமத்தைச் சேர்ந்த நபர்களே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அவர்கள் தந்தை, மகன் என்றும் மற்றையவர்கள் அவர்களின் உறவினர் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன நபர்களை தேடும் பணிகளை மீனவ சமூகத்தினரும், கடற்படையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரம், காணாமல்போன மூவரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கரையொதுங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.