• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அமைச்சரவை தீர்மானங்களின் முழு விபரம்!

அமைச்சரவை தீர்மானங்களின் முழு விபரம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/01/28
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

2025-01-27 திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு

01. 2025 ஆண்டுக்காக நிதி ஆணைக்குழுவால் சமரப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகள்

அரசியல் யாப்பின் 154 ங பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய மாகாண சபைகளுக்கு தேவையான வளத் தேவைகள் தொடர்பாகவும், மாகாண சபைகளுக்காக தேசிய பாதீட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதிக்கொடைகள் ஒவ்வொரு மாகாண சபைகளுக்கும் ஒதுக்கீடு செய்து வழங்கும் கோட்பாட்டு தொடர்பாகவும் விதந்துரைகளைச் சமர்ப்பித்தல் நிதி ஆணைக்குழுவுக்கு உரித்தளிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒவ்வொரு மாகாண சபைக்காகவும் 2025 ஆண்டின் தேசிய பாதீட்டின் மூலம் ஒதுக்கீடு செய்து வழங்குவதற்காக நிதி ஆணைக்குழுவால் விதந்துரை செய்யப்படும் மீண்டெழும் மற்றும் மூலதனச் செலவுத் தேவைகள் அடங்கிய அறிக்கை மேற்குறித்த ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலே சொல்லப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கும், அரசியல் யாப்பின் 154 ங (7) ஆவது உபபிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய குறித்த விதந்துரைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

02. கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஸ்ரீபாலி வளாகத்தை அபிவிருத்தி செய்தல்

கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஸ்ரீபாலி வளாகத்தில் 850 வரையான மாணவர்கள் கல்வி கற்பதுடன், மாணவர்கள் விளையாடுதல் மற்றும் விளையாட்டு விழாக்களை நடத்துவதற்காக பொருத்தமான விளையாட்டு மைதானம் இன்மை பாரிய குறைபாடாக இருக்கிறது. எனவே, ஸ்ரீபாலி வளாகத்துக்கு அருகிலுள்ள கொட்டகல பெருந்தோட்ட கம்பனியின் கீழுள்ள ஹொரண பெருந்தோட்டத்துக்கு உரியதான, தற்போது எந்தவொரு பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்படாத 2.5 ஏக்கர் காணித் துண்டை பொது மைதானத்துக்காக பாவிக்கக்கூடிய வகையில் ஒதுக்குவதற்காக தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. மேற்குறித்த காணித்துண்டை இழப்பீடு இன்றி விடுவிப்பதற்கு கொட்டகல பெருந்தோட்ட கம்பனியின் பணிப்பாளர் சபையின் ஒப்புதல் கிடைத்துள்ளது. மேற்குறித்த கருமத்துக்காக, மேலே சொல்லப்பட்ட காணித் துண்டை ஒதுக்கீடு செய்து வழங்குதல் தொடர்பில் குறித்த காணியின் தங்க பங்குதாரரான திறைசேரி செயலாளரின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய, கொட்டகல பெருந்தோட்ட கம்பனியின் கீழுள்ள ஹொரண பெருந்தோட்டத்துக்கு உரிய காணியில் 2.5 ஏக்கர் காணித்துண்டை ஸ்ரீபாலி வளாகத்துக்கு உரித்தளிப்பதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சர் என்ற வகையில் கௌரவ பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

03. இலங்கை பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டு பல்கலைகழகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளுதல்

இலங்கை பல்கலைக்கழகங்களை உலக தரப்படுத்தல் சுட்டிகளில் உயர்த்தி வைத்தல் மற்றும் சர்வதேசமயப்படுத்தலுக்காக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் பின்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற வகையில் கௌரவ பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

 கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சித்திட்டங்களை மேம்படுத்துதல், அபிவிருத்தி செய்தல் மற்றும் நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், ஒருங்கிணைந்த பயிற்சிப்பட்டறைகள் மாநாடுகளை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பரஸ்பரம் அக்கறை கொண்டுள்ள துறைகளில் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதலை நோக்கமாக கொண்டு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் மக்கள் சீனக் குடியரசின் வூஹான் விளையாட்டு பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

 உயர் கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக இரு தரப்புக்குமிடையில் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், உயர் கல்வி விஞ்ஞான ஆராய்ச்சிகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள், கல்வி ஆளணியினர், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களை பரிமாற்றம் செய்தல், ஒன்றிணைந்த ஆராய்ச்சி செயற்பாடுகளை மேம்படுத்துதலை குறிக்கோளாகக் கொண்டு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் ஐசூ பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

 ஒன்றிணைந்த ஆராய்ச்சி, கல்வி மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் மேம்படுத்துதல், மாணவ மற்றும் கல்வி ஆளணி பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள், ஒன்றிணைந்த பயிற்சிப்பட்டறைகள் மற்றும் பயிற்சி அமர்வுகளை நடத்துதல், வெளியீடுகளை பரிமாற்றம் செய்தலை குறிக்கோளாக கொண்டு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் நோர்வே எக்டர் பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

 பரஸ்பரம் பலன் கிடைக்கும் குறுங்கால பயிற்சி பாடநெறிகள் மற்றும் கருத்திட்டங்களை அடையாளம் காணும் குறிக்கோளுடன் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலிய டீகின் பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

 பரஸ்பர தேவைகள் மற்றும் பலன்களை அடிப்படையாக கொண்டு, பட்டப்பின் படிப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் குறிக்கோளுடன் மாநாடுகள் மற்றும் கல்விசார் கூட்டங்களில் பங்குபற்றுதல், கல்வி தகவல்கள் மற்றும் ஏனைய தகவல்களை பரிமாற்றம் செய்தல் போன்றவற்றை குறிக்கோளாக கொண்டு மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் சீன லீன்யீ பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

 ஆராய்ச்சி மற்றும் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பான கற்பித்தல், கற்றல் பொருட்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய இலக்கிய தகவல்களை பரிமாற்றம் செய்தல், பரஸ்பரம் அக்கறை கொண்டுள்ள துறைகளில் குறுங்கால தொடர்ச்சியான கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள், மாநாடுகள் அல்லது பயிற்சிப்பட்டறைகளை ஒன்றிணைந்து ஏற்பாடு செய்தல் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துவதனை குறிக்கோளாக கொண்டு பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மஹாத்மா காந்தி மருத்துவ மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

 முதலாவது பட்டம், முதுமாணி பட்டம் மற்றும் கலாநிதி பட்டம் உள்ளிட்ட ஒன்றிணைந்த ஆராய்ச்சி மேற்பார்வை, கற்பித்தல், பயிற்சிகள், ஆராய்ச்சிகள் மற்றும் புத்தாக்கம் ஆகிய ஒத்துழைக்கக்கூடிய துறைகளில் வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்கு மாணவ, கல்வி ஆளணி மற்றும் ஆராய்ச்சியாளர்களை பரிமாற்றம் செய்வதற்கு வசதி செய்தல், நன்நடத்தை விரிவுரையாளர்களுக்கு சேவை ஆரம்ப பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல் போன்றவற்றை குறிக்கோளாக கொண்டு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் சீன nஷன்டோன்க் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

 ஆராய்ச்சி ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டங்கள், பீடங்களின் கல்வி ஆளணியினர் மற்றும் மாணவ பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள், வெளிநாட்டு கல்வி வாய்ப்புகள், கிளினிக் அனுபவம், உசாத்துணை மற்றும் கலாச்சார நிகழ்ச்சித்திட்டங்கள் போன்றவற்றை மேம்படுத்துதலை குறிக்கோளாக கொண்டு களனிய பல்கலைக்கழகம் மற்றும் மக்கள் ஐக்கிய அமெரிக்காவின் ஹொட்லன்ட்டின் நியூயோர்க் அரச பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

 பட்டப்படிப்பு மற்றும் முதுமாணி பட்ட பாடநெறி நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்படுதலை குறிக்கோளாக கொண்டு இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலிய ரோயல் மெல்பெர்ன் தொழில்நுட்ப நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

 கல்வி மற்றும் ஒன்றிணைந்த ஆராய்ச்சி நிகழ்ச்சித்திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் ஒன்றிணைந்த பயிற்சிப்பட்டறைகள் மற்றும் மாநாடுகளை ஏற்பாடு செய்தலை குறிக்கோளாக கொண்டு களனி பல்கலைக்கழகம் மற்றும் கொரிய குடியரசின் தேசிய கொரிய சமுத்திரவியல் மற்றும் சமுத்திர பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

04. கழிவுகளை ஏற்றிச் செல்வதற்காக பாவிக்கப்படும் Garbage Compactors கொள்வனவு செய்வதற்காக முந்நூறு மில்லியன் ஜப்பானிய யென் நிதிக்கொடையை பெற்றுக் கொள்ளுதல்

Clean Sri Lanka நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கையை தூய்மையான, பேண்தகு மற்றும் சுற்றாடல் பொறுப்புள்ள முன்மாதிரியாக மாற்றம் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குத் தேவையான மேம்பட்ட கழிவு முகாமைத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதிருத்தல் மேற்குறித்த நோக்கை அடைவதற்கான பிரதான தடையாக அடையாளம் காணப்பட்டள்ளது. இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு அமைய ஜப்பானிய அரசினால் 300 மில்லியன் யென் நிதிக்கொடை வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேற்குறித்த நிதி மேல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவ ஆற்றலை அதிகரிப்பதற்காக 28 Garbage Compactors கொள்வனவு செய்வதற்காக பாவிக்க எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த கருத்திட்டம் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேற்பார்வையில் அமுப்படுத்தப்படுவதுடன், மேற்குறித்த கருத்திட்டத்தின் கீழ் மேல் மாகாணத்துக்கு 14, கிழக்கு மாகாணத்துக்கு 8, வடக்கு மாகாணத்துக்கு 6 என்றவாறு புயசடியபந ஊழஅpயஉவழசள பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. அதற்கமைய ஜப்பான் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்குறித்த நிதிக்கொடையை பெறுவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

05. ‘புதிய சபிரி கிராமிய கடன் திட்டம் – சருசார’ வட்டி நிவாரண திட்டத்தை 2025 ஆண்டிலிருந்து வருடாந்த நிகழ்ச்சித்திட்டமாக அமுல்படுத்துதல்

குறுங்கால பயிர்ச்செய்கை மற்றும் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபடும் சிறிய மற்றும் மிகச்சிறிய அளவான விவசாயிகளின் செயற்பாட்டு மூலதனத் தேவையை நிறைவேற்றுவதற்காக ‘சருசார’ புதிய சபிரி கிராமிய கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த திட்டம் மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தி திணைக்களத்தினால் 2020 ஆண்டிலிருந்து இற்றைவரை அமுல்படுத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட மத்திய வங்கி புதிய சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய அவ்வாறான சலுகை கடன் திட்டங்களை அமுல்படுத்தும் இயலுமை மத்திய வங்கிக்கு இல்லை. எனவே, 2025 ஆண்டிலிருந்து ‘சருசார’ புதிய கிராமிய கடன் திட்டத்தை வருடாந்த நிகழ்ச்சித்திட்டமாக பொதுத் திறைசேரியின் அபிவிருத்தி நிதி திணைக்களத்தின் மூலம் அமுல்படுத்துவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

06. வெளிவிவகார, வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் இத்தாலி குடியரசின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கிடையிலான அரசியல் உசாத்துணைப் பொறிமுறையை நிறுவுதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

அரசியல், பொருளாதார, வர்த்தக, விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் கலாச்சார துறைகள் அடங்கலாக இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல், பலப்படுத்துதல் மற்றும் விரிவாக்குதலை குறிக்கோளாகக் கொண்டு இலங்கை மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையிலான அரசியல் உசாத்துணைப் பொறிமுறையை நிறுவுதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, மேற்குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் இத்தாலி குடியரசின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் கையொப்பம் இடுவதற்கு வெளிவிவகார, வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

07. பிராந்திய ஒன்றிணைந்த பன்நோக்கு அனர்த்த எச்சரிக்கை கட்டமைப்பு நிறுவனத்தின் நான்காவது அமைச்சர்கள் சந்திப்பை நடத்துதல்.

பிராந்திய ஒன்றிணைந்த பன்நோக்கு அனர்த்த எச்சரிக்கை கட்டமைப்பு (சுஐஆநுளு) நிறுவனம் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்த ஆசிய, ஆபிரிக்க மற்றும் பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 40 நாடுகளுக்கு அதிகமான நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பாகும். தமது அங்கத்துவ நாடுகளில் தாக்கம் செலுத்தும் வெள்ளம், வறட்சி, மண்சரிவு, சூறாவளி போன்ற அனர்த்தங்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கை வழங்கும் தொழில்நுட்ப மூலோபாயத்தை மேம்படுத்துவதற்காக ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்குதல் குறித்த அமைப்பின் குறிக்கோள் ஆகும். மேற்குறித்த நிறுவனத்தின் நான்காவது அமைச்சர்கள் மாநாடு 2025 ஆண்டில் இலங்கையில் நடத்தபடுவதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பிராந்திய ஒன்றிணைந்த பன்நோக்கு அனர்த்த எச்சரிக்கை கட்டமைப்பின் நான்காவது அமைச்சர்கள் மாநாடு 2025 ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் அல்லது மே மாத முதல் வாரத்தில் 04 நாட்கள் கொழும்பில் நடத்துவதற்கு விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

08. தெரிவுசெய்யப்பட்ட மருத்துவமனைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் கருத்திட்டத்தின் கருத்திட்ட காலத்தை நீடித்தல்.

சீன அரசின் உதவியுடன் அமுல்படுத்தப்படும் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் கருத்திட்டத்தின் கீழ் மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை வழங்கி தெரிவுசெய்யப்பட்ட மருத்துவமனைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் மேற்கொள்ளப்படுகிறது. குறித்த திட்டத்தின் கீழ் 13 மருத்துவமனைகள் பல்வேறு விஷேட அலகுகளை உள்ளடக்கிய மருத்துவமனை கட்டிடத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கும், அவற்றுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை வழங்குவதற்கும் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்குறித்த கருத்திட்டத்தின் கீழ் 08 மருத்துவமனைகளின் நிர்மாண செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. ஒரு மருத்துவமனை தவிர ஏனைய நான்கு மருத்துவமனைகள் 90மூ முன்னேற்றத்தை தாண்டியிருப்பதனை கருத்திலெடுத்து கருத்திட்டத்தின் செயற்பாடுகளை விரைவாக நிறைவு செய்யக்கூடிய வகையில் கருத்திட்ட காலப்பகுதியை 2025-12-31 வரை நீடிப்பதற்காக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

09. காணி பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்கள சட்ட வரைபு

2010.05.20 திகதிய அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் காணிப் பயன்பாட்டு கொள்கை திணைக்களம் நிறுவப்படுதல், அதன் கருமங்கள் ஃ பொறுப்புகளை நிச்சயித்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணிப் பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பொறுப்புகளை மிகவும் வினைத்திறனாக அமுல்படுத்துவதற்காக சட்ட ரீதியான பின்னணியை தயாரிப்பதற்காக பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் குறித்த திணைக்களத்தின் கருமங்கள் மற்றும் அதிகாரங்கள் நிச்சயித்தல் உகந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, அதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி சட்டவரைபை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

Related

Tags: Cabinetcabinet decisionsஅமைச்சரவை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் – அரசாங்கம் அறிவிப்பு!

Next Post

ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

Related Posts

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
JUST IN

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!
இலங்கை

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

2025-12-05
நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!
இலங்கை

நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!
இலங்கை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!
இலங்கை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

2025-12-05
5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!
இலங்கை

5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

2025-12-05
Next Post
ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

அண்டார்டிகாவின் வின்சன் மலையை ஏறிய முதல் இலங்கையரானார் ஜொஹான் பீரிஸ்!

அண்டார்டிகாவின் வின்சன் மலையை ஏறிய முதல் இலங்கையரானார் ஜொஹான் பீரிஸ்!

வாகன இறக்குமதி வர்த்தமானி தொடர்பான தெளிவூட்டல்!

வாகன இறக்குமதி வர்த்தமானி தொடர்பான தெளிவூட்டல்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

0
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

0
நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

0
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

0
பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

0
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

2025-12-05
நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

2025-12-05
பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

2025-12-05

Recent News

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

2025-12-05
நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

2025-12-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.