• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
மகாத்மா காந்தியின் நினைவு தினம் – சிறப்பு கட்டுரை

மகாத்மா காந்தியின் நினைவு தினம் – சிறப்பு கட்டுரை

Kavipriya S by Kavipriya S
2025/01/30
in ஆசிரியர் தெரிவு, சிறப்புக் கட்டுரைகள்
72 1
A A
0
42
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். நம்மை எதிர்ப்பவர்களை சண்டையிட்டு வெல்லாமல் அகிம்சையின் மூலமும் வெல்லலாம் என்பதனை நிரூபித்து காட்டியவர் காந்தி. இவர் பீகாரில் சத்தியகிரகம் எனும் முறையை வெற்றிகரமாக நடத்தினார். இந்திய அரசியல் மட்டுமன்றி உலக மக்களுக்கும் உதாரணமான தலைவராக மகாத்மா காந்தி தன் வாழ்வில் சத்தியம், நேர்மை, அகிம்சை ஆகிய கொள்கைகளை கடைப்பிடித்து வாழ்ந்து காட்டிய மகான் ஆவார்.

சுதந்திர இந்தியாவின் தேசப்பிதா என்று அழைக்கப்படுபவர் மகாத்மா காந்தி. இவரது முழுப்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரின் தாய்மொழி குஜராத்தி மொழி. மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் கரம்சந்த் உத்த ம்சந்த் காந்தி, தாயார் பெயர் புத்லிபாய் ஆகும். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார்.

காந்தி சிறு வயதில் பார்த்த அரிச்சந்திரா நாடகம் இவர் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. காந்தி தனது 16 ஆம் வயதில் தந்தையை இழந்தார். காந்திக்கு 4 ஆண் குழந்தைகள் பிறந்தது. தனது குடும்ப வாழ்க்கையோடு நிறுத்திவிடாமல் சமூகத்தின் மீது பற்று உடையவராக வாழ்ந்தார்.

காந்தி படிப்பில் சுமாராக மாணவனாக இருந்தாலும் நேர்மையான மாணவனாக இருந்தார். காந்தி தனது 18 ஆம் வயதில் பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். வழக்கறிஞர் படிப்பை முடித்து சிறிது காலம் வழக்கறிஞராக மும்பையில் பணியாற்றினார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நீதிமன்றத்திற்கு வருபவர்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் பணியை செய்தார். 1893 -ல் ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென்னாப்பிரிக்காவில் பணிபுரிய பயணத்தை தொடங்கினார்.

தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும், இனப்பாகுபாடும் அதிகமாக இருந்தது. இது காந்தியின் மனதை காயப்படுத்தியது. தென்னாப்பிரிக்காவில் காந்திக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அவரை மிக பெரிய அரசியல் சக்தியாக மாற்றியது.

காந்தி அவர்கள் தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியா ரயிலில் ஏறிய காந்தி அவர் வெள்ளையர் இல்லை என்பதற்காக தூக்கி வீசபட்டார். அந்த ரயில் நிலையத்தில் காந்தியின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடி பெயர்ந்த இந்திய மக்களும் படும் பிரச்சனைகளை உணர்ந்தார். அதனால் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் வாக்குரிமையை நிறுத்தும் தீர்மானத்தை எதிர்த்தார்.

1894 -ல் தென்னாப்பிரிக்காவில் நாட்டல் இந்திய காங்கிரஸ் எனும் கட்சியை ஆரம்பித்தார். அதில் அவரே தலைமையாக வகித்தார்.

அறவழி போராட்டத்தின் மூலம் தென்னாபிரிக்காவில் வாழும் இந்தியர்களின் சமூக நிலையை உயர்த்தி அவரது முயற்சியில் வெற்றியை கண்டார்.

இந்தியாவில் தனது மக்கள் அடிமைப்படுவதை கண்டு கவலை அடைந்தார். இதனால் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலை போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டார்.

1924 -ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக பொறுப்பேற்றார். காங்கிரஸில் பல மாற்றங்களை காந்தி ஏற்படுத்தினார். இவர் முதலில் விவசாயிகளுக்கான சம்பாரண் போராட்டத்தை தொடங்கினார். 1930 -ல் 240 மைல் நடைபயணம் இந்திய வரலாற்றில் உப்பு சத்தியாகிரகம் என்று சொல்லப்படுகிறது.

1942 -ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் காந்தி பெரும் பங்களிப்பு ஆற்றினார். 1947 -ல் இந்தியா சுதந்திரம் அடைய முக்கியமான ஒருவராக காந்தி இருந்தார்.
ஜனவரி 12, 1948 அன்று, டெல்லியில் நிலவிய மத மோதல்களை நிறுத்தக் கோரி, உண்ணாவிரதம் மேற்கொள்ளத் தொடங்கினார் காந்தி.

ஜனவரி 15, 1948 அன்று, காந்தியின் உடல்நலம் அபாயகரத்தை எட்டியது.

அமைச்சரவை, பாகிஸ்தான் அரசுக்கு நிதியுதவியாக 550 மில்லியன் ரூபாய் தர முடிவுசெய்ததை வரவேற்றார் காந்தி. எனினும் பொது அமைதிக்காக, உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லை.

காந்தியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். மத்திய அமைதிக் குழு உருவாக்கப்பட்டது. மக்களிடையே அமைதி ஏற்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. காந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

ஜனவரி 20, 1948 அன்று, பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. காந்தி ஆபத்தின்றித் தப்பித்தார். டெல்லியின் மெஹ்ரவுலியில் நடந்த இஸ்லாமியர்களின் திருவிழாவில் பங்கேற்றார் காந்தி.
இஸ்லாமியர்களின் திருவிழாவில் பங்கேற்றதால் கோபமுற்ற இந்து அகதிகள், காந்தியை இமயமலை சென்று ஓய்வு எடுக்குமாறு கூறினர்.

ஜனவரி 30, 1948 அன்று, மாலைப் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த காந்தி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

நாதுராம் கோட்சே கையில் இருந்த துப்பாக்கியில் வெடித்த மூன்று தோட்டாக்கள் காந்தி உடலில் பாய்ந்தன. ‘ஹே ராம்!’ என்ற முழக்கத்தோடு, சரிந்து விழுந்து இறந்தார் காந்தி.

பிப்ரவரி 12, 1948 அன்று, காந்தியின் உடல் யமுனை நதிக்கரையோரத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது சாம்பல் பல்வேறு இடங்களில் கரைக்கப்பட்டது. அகா கானின் அரண்மனையில் இன்றும் காந்தியின் சாம்பல் வைக்கப்பட்டிருக்கிறது.

காந்திக்கு இரவீந்திரநாத் தாகூர் மகாத்மா என்ற பட்டத்தை வழங்கினார். குஜராத் மொழியில் எழுதி தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டவை சுயசரிதை சத்தியசோதனை நூல்கள் ஆகும். காந்தியை பெருமைப்படுத்தும் வகையில் இந்தியாவில் பல இடங்களில் சிலைகளும் அருங்காட்சியகங்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்திய கல்வி திட்டத்தில் காந்தியின் வரலாறு ஒரு பாடமாகவும் கற்பிக்கபடுகிறது.

அத்தோடு, தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட இன்றைய தினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக பாடுபட்டவர்களை போற்றும் வகையில் தியாகிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

Related

Tags: சிறப்பு கட்டுரைநினைவு தினம்மகாத்மா காந்தி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உர மானியம் பெற்றுக் கொள்ளும் விவசாயிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

Next Post

பேஸ்ட்ரியால் ஆபத்து? கனடாவில் 69 பேர் பாதிப்பு

Related Posts

மா*வீரர் நாளுக்குப் பின் வீசிய புயல்! நிலாந்தன்.
இலங்கை

மா*வீரர் நாளுக்குப் பின் வீசிய புயல்! நிலாந்தன்.

2025-11-30
தென்கிழக்கு ஆசியவை மூழ்கடித்துள்ள வெள்ளம்; இறப்பு எண்ணிக்கை 129 ஆக உயர்வு!
ஆசிரியர் தெரிவு

தென்கிழக்கு ஆசியவை மூழ்கடித்துள்ள வெள்ளம்; இறப்பு எண்ணிக்கை 129 ஆக உயர்வு!

2025-11-28
பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை!
ஆசிரியர் தெரிவு

பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை!

2025-11-28
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்
ஆசிரியர் தெரிவு

குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

2025-11-28
ஆசிரியர் தெரிவு

இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்ச‍ை!

2025-11-27
வியட்நாமில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ: 14 பேர் உயிரிழப்பு
ஆசிரியர் தெரிவு

ஹொங்கொங்கில் குடியிருப்பு கட்டிடங்கள் தீக்கரை; 44 பேர் உயிரிழப்பு, 279 பேர் மாயம்!

2025-11-27
Next Post
பேஸ்ட்ரியால் ஆபத்து? கனடாவில் 69 பேர் பாதிப்பு

பேஸ்ட்ரியால் ஆபத்து? கனடாவில் 69 பேர் பாதிப்பு

மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு சி.வி.கே.சிவஞானம் அஞ்சலி!

மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு சி.வி.கே.சிவஞானம் அஞ்சலி!

அமெரிக்க ஏர்லைன்ஸ் விபத்து; 30 உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்!

அமெரிக்க ஏர்லைன்ஸ் விபத்து; 30 உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

0
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

0
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

0
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

0
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

0
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

2025-11-30

Recent News

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.