தென் கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தென்னாப்பிரிக்கா முதல் முறையாக உலகக் கிண்ணத்தின் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
மெக்சிகோவின் குவாடலூப்பில் உள்ள மான்டேரி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் ஏதும் அடிக்கப்படாத நிலையில், ஷெபாங் மோரேமியின் கிராஸை 15 யார்டு தூரத்திலிருந்து தபேலோ மாசேகோ கோலாக மாற்றி, ஆட்டத்தின் தீர்க்கமான கோலை அடித்தார்.
முன்னதாக, மாசேகோவின் நம்பிக்கையூட்டும் ஒரு எதிர்த்தாக்குதலை கொரிய தடுப்பாட்டக்காரர் லீ கி-ஹ்யூக் தடுத்து நிறுத்தினார்.
கோல்கீப்பர் கிம் சியுங்-க்யூ, தலென்டே மபதாவின் ஷாட்டை அற்புதமாக இரட்டைத் தடுப்பு மூலம் தடுத்ததுடன், அருகிலிருந்து எவிடன்ஸ் மக்கோபா அடித்த ஷாட்டையும் தடுத்தார்.
போட்டியின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற, தென்கொரியாவுக்கு ஒரு சமனிலை மட்டுமே தேவைப்பட்டது.
ஆனால், அவர்களால் ஆட்டத்தை சமன் செய்ய முடியவில்லை.
சிறந்த மூன்றாவது இட அணிகளில் ஒன்றாக அவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்களா என்பதை அறிய, ஏனைய போட்டிகளின் முடிவுகளுக்காகக் காத்திருக்க வேண்டும்.
இந்த வெற்றியின் மூலம், தங்களின் ஆரம்ப மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற மெக்சிகோவிற்குப் பின்னால், ‘ஏ’ பிரிவில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.













