அமெரிக்காவில் நடைபெற்ற 40 ஆவது திருமதி உலக அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா, இன்று (04) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த திருமணமான அழகு ராணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி அமெரிக்காவின் லொஸ் வேகாஸ் நகரில் கடந்த மாதம் 30 ஆம் திகதி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று அதிகாலை 01.55 மணிக்கு டோஹா கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் இஷாதி அமந்தா கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
மேலும், காலை 09.00 மணியளவில் சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியிலும் இஷாதி அமந்தா கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.