அரசாங்க நிறுவனங்களின் இலட்சினைகளைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் போலியான விளம்பரங்களைப் பரப்பி தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக இவ்வாறான பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் (SLCERT) சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கி, தனது இலச்சினையைப் பயன்படுத்தி மோசடியான விளம்பரம் ஒன்று சமூக ஊடகங்களில் இந்த நாட்களில் பரப்பப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது.
தொழில் வாய்ப்புகளை வழங்குவதாக கூறி அதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அது போலியான விளம்பரம் எனவும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இலச்சினையைப் பயன்படுத்தி இதேபோன்ற வேலை வெற்றிட விளம்பரங்கள் அண்மைய நாட்களில் வெளியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, அரசாங்க இலச்சினைகளை பயன்படுத்தி வெளியிடப்படும் போலி விளம்பரங்களுக்கு இவ்வாறு பதிலளிப்பது பொருத்தமற்றது என SLCERT இன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல குறிப்பிட்டுள்ளார்.
போலி இணையதளங்கள், தேசிய அடையாள அட்டைகளின் நகல், கடவுச்சீட்டு நகல்கள், பிறப்புச் சான்றிதழ்கள் போன்ற உங்களின் தனிப்பட்ட தரவுகளின் நகல் போன்ற தனிப்பட்ட தகவல்களை அடிக்கடி திருடுகின்றன.
இதுபோன்ற இணையதளங்களுக்குச் சென்று உங்கள் தனிப்பட்ட தகவல்களை எந்தச் சூழ்நிலையிலும் வழங்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.