ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்த சதி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது அசாத் மௌலானா சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் ‘தயவு செய்து ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையைப் படிக்குமாறும், சிஐடி அதிகாரிகள் அளித்த சாட்சியங்கள் உட்பட ‘அந்த அறிக்கையில் உள்ளதைத் தவிர வேறு தனக்குத் தெரியாது எனவும் அவர் ஓடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் அமைச்சர் பிள்ளையானின் முன்னாள் இணைப்புச் செயலாளர் அசாத் மௌலானா, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக அளித்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணையின் முக்கிய சாட்சியான மௌலானா, விரைவில் சுவிட்சர்லாந்திலிருந்து அழைத்து வரப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக கோத்தபய ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக, கோட்டாபய ராஜபக்ஷ தன்னுடனும் முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் சுரேஷ் சாலே பிள்ளையானுடனும் இணைந்து செயற்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.