வவுனியாவில் வெள்ள அனர்த்தினால் பாதிப்படைந்த சுமார் 350 குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர்பொருட்கள் அடங்கிய பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 10மணிக்கு இடம்பெற்றது. சீனத்தூரகத்தின் பிரதிப் பிரதானி சூ.யன்வெய்யின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாணத்தில் 2470 குடும்பங்களுக்கு 6490ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக வவுனியா மாவட்டத்தில் 350 குடும்பங்களுக்கு இன்று வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ந.கமலதாசன் மற்றும் சீன தூதரக இடைக்கால பொறுப்பாளர் ஜுயானுவேல், சீன தூதரக அரசியல் பிரிவுத் தலைவர் குயின் லிகோங், மற்றும் சீன தூதரக அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.