செயற்கை நுண்ணறிவு மாநாடு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்வதற்காக நேற்று இந்தியாவில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
இன்று பிற்பகல் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து உரையாற்றிய போது, செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே நமது பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் நமது சமூகத்தை மறுவடிவமைத்து வருகிறது. இந்த நூற்றாண்டில் மனித குலத்திற்கான Code-ஐ AI எழுதுகிறது.
ஒரு எளிய உதாரணத்துடன் ஆரம்பிக்கிறேன். உங்கள் மருத்துவ அறிக்கையை ஒரு AI செயலியில் பதிவேற்றினால், அது உங்கள் ஆரோக்கியம் தொடர்பான அனைத்து தகவலையும் எளிய மொழியில் விளக்க முடியும்.
AI முன்னெப்போதும் இல்லாத அளவு மற்றும் வேகத்தில் வளர்ந்து வருகிறது. மேலும் மாற்றியமைக்கப்பட்டு இன்னும் வேகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் open source systems-ஐ நாம் உருவாக்க வேண்டும். ஒரு தரப்பு என்று இல்லாமல் தரமான தரவு மையங்களை உருவாக்க வேண்டும். சைபர் பாதுகாப்பு, தவறான தகவல்கள் மற்றும் டீப்பேக்ஸ் குறித்து நாம் கவனிக்க வேண்டும்.
வேலை இழப்பு ஏ.ஐ-யின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என பார்க்கப்படுகிறது. ஆனால் தொழில்நுட்பத்தால் வேலை மறைந்து போவதில்லை. அதன் தன்மை மாறுகிறது என்பதை நமது வரலாறு காட்டியுள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தறிக்கு ஏற்றவாறு நமது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் பலவற்றை மேம்படுத்துவதன் மூலம் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்ற AI உதவும்.
நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான பயணத்தை எளிதாகவும் வேகமாகவும் மாறும் ஒரு உலகத்தை உருவாக்க இது உதவும். இதைச் செய்ய, நாம் வளங்களையும் திறமைகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.