65 மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் கொழும்பை சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவரை கொழும்பு குற்றப்பிரிவின் (CCD) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, கொழும்பு 05 ஐ வசிக்கும் அந்த நபர், வணிக நடவடிக்கைகளுக்காக இரண்டு சந்தர்ப்பங்களில் பணத்தைப் பெற்றுள்ளார்.
விசாரணைகளில் அந்த நபர் 30,200,000 ரூபாயைத் திருப்பிக் கொடுத்ததாகவும், ஆனால் மீதமுள்ள 34,800,000 ரூபாயைத் திருப்பிக் கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.