உக்ரேனில் போர் நிறுத்தம் செய்வதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை மொஸ்கோ கொள்கையளவில் ஆதரிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வியாழக்கிழமை (13) தெரிவித்தார்.
இருந்த போதிலும், மோதலை விரைவாக நிறைவுக்குக் கொண்டுவருவதற்கான பல விளக்கங்களையும் நிபந்தனைகளையும் அவர் கோரினார்.
2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று, காயடையச் செய்தது.
மேலும், மில்லியன் கணக்கான மக்களை இடம்பெயரச் செய்ததுடன், நகரங்களை இடிபாடுகளாக மாற்றியது மற்றும் மொஸ்கோவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக மிகக் கடுமையான மோதலைத் தூண்டியது.
இந்த நிலையில், அமெரிக்க போர் நிறுத்த திட்டத்திற்கு புட்டினின் பெரிதும் தகுதிவாய்ந்த ஆதரவு, வொஷிங்டனுக்கு நல்லெண்ணத்தை சமிக்ஞை செய்வதற்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் மேலும் பேச்சுவார்த்தைகளுக்கான கதவைத் திறப்பதற்குமான வாய்ப்பாக தோன்றியது.
ஆனால், பல முக்கியமான விவரங்கள் வரிசைப்படுத்தப்பட வேண்டும் என்றும் எந்தவொரு ஒப்பந்தமும் மோதலின் மூல காரணங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் புட்டின் வியாழக்கிழமை கூறினார்.
மேலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் நன்றி தெரிவித்தார்.
புட்டினின் கருத்துக்களுக்குப் பின்னர் வெள்ளை மாளிகையில் பேசிய ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப், ரஷ்யத் தலைவரைச் சந்திப்பதில் “ஆசப்படுகிறேன்” என்றும், மொஸ்கோ “சரியானதைச் செய்யும்” என்றும், முன்மொழியப்பட்ட 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளும் என்றும் நம்புவதாகவும் கூறினார்.
சவுதி அரேபியாவில் இந்த வாரம் தொடக்கம் அமெரிக்கா-உக்ரேன் இடையே நடந்த ஒரு நாள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அமெரிக்கா முன்மொழிந்த ரஷ்யாவுடன் உடனடியான 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக கெய்வ் தெரிவித்துள்ளது.
ஜெட்டாவில் செவ்வாயன்று (11) நடந்த பேச்சுவார்த்தை, ஓவல் அலுவலகத்தில் ஜெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான முன்னதாக நடந்த சந்திப்பின் அசாதாரண மோதலுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பாகும்.
பேச்சுவார்த்தையின் பின்னர், வொஷிங்டன் நிறுத்தி வைத்திருந்த உக்ரேனுக்கான உளவுத்துறை பகிர்வு மற்றும் பாதுகாப்பு உதவியை உடனடியாக மீண்டும் தொடங்குவதாக அறிவித்தது.
2022 பெப்ரவரியில் ரஷ்யா, உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது.
இப்போது உக்ரேன் பிரதேசத்தில் சுமார் 20% ஐக் கட்டுப்படுத்துகிறது.
ரஷ்ய இராணுவத்திற்காகப் போராடும் 95,000 க்கும் மேற்பட்டோர் போரில் இறந்துள்ளனர்.
உக்ரேன் தனது உயிரிழப்பு புள்ளிவிவரங்களை கடைசியாக 2024 டிசம்பரில் புதுப்பித்தது, அப்போது ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் 43,000 உக்ரேனிய இறப்புகளை ஒப்புக்கொண்டார்.
மேற்கத்திய ஆய்வாளர்கள் இந்த எண்ணிக்கையை குறைத்து மதிப்பிடுவதாக நம்புகின்றனர்.
ரஷ்யா, தனது 2022 படையெடுப்பை உக்ரேனை “நாசியை அழிக்க” மற்றும் நேட்டோவின் விரிவாக்கத்தை நிறுத்த வடிவமைக்கப்பட்ட “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்று வர்ணித்துள்ளது.
மெஸ்கோவும், வொஷிங்டனும் இப்போது இந்த மோதலை மூன்றாம் உலகப் போராக விரிவடையக்கூடிய ஒரு கொடிய மறைமுகப் போராக சித்தரிக்கின்றன.