பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை இன்று (14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இந்த விடயம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தியதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இதன்போது “இலங்கையில் வடக்கு மற்றும் தெற்கில் பல தசாப்தங்களாக, மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வந்துள்ளதாகவும், அதை தாம் நன்கு அறிவதாகவும், இந்த நாட்டு மக்களுக்கு ஜனநாயகம் தேவை எனவும், இந்த விடயத்தில் மக்களின் நம்பிக்கையை வென்று, ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.