கொழும்பு, கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜபோஸ்லேன் பகுதியில் இரண்டு இளைஞர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் சனிக்கிழமை (15) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 16 முதல் 44 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் குழுவொன்று நேற்று (16) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 02 கத்திகள் மற்றும் கையடக்க தொலைபேசி என்பன கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிராண்ட்பாஸ் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தில் 22 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்தவர்கள் ஆவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரேண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.