• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய இலங்கை பொலிஸில் மாற்றம் அவசியம் – ஜனாதிபதி

சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய இலங்கை பொலிஸில் மாற்றம் அவசியம் – ஜனாதிபதி

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/04/08
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

சட்டம், ஒழுங்கு மற்றும் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது தொடர்பில் இலங்கை பொலிஸ் மீது குடிமக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனைப் பேணுவது பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

களுத்துறை, கட்டுகுருந்த விசேட அதிரடிப்படை பயிற்சி முகாமில் நேற்று (07) நடைபெற்ற 82 ஆவது அடிப்படைப் பயிற்சி பாடநெறியை நிறைவு செய்தோர் வெளியேறும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

தமது தொழிற்துறைக்கு ஒருவர் எந்தளவு நியாயத்தை நிலைநாட்டியுள்ளார், கௌரவமளித்துள்ளார் என்பது அவரின் தொழில் வாழ்க்கையின் ஊடாகப் பிரதிபலிக்கிறது எனவும் அந்த தொழில் முறையை அடைந்து இந்த நாட்டுக்கு அவசியமான மாற்றத்தை ஏற்படுத்த பங்களிக்குமாறு பயிற்சி பெறும் இளம் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

பல துறைகள் வீழ்ச்சியடைந்துள்ள தருணத்தில், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி அரசியல் அதிகாரத்தை மாற்ற பிரஜைகள் நடவடிக்கை எடுத்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் அதிகாரத்தை மாற்றுவதன் மூலமாக மாத்திரம், ஒரு நாடு வெற்றிபெறாது என்றும், அனைத்து துறைகளிலும் சாதகமான மாற்றம் தேவை என்றும் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பு புதிய பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், அதனைப் பாதுகாக்கும் அதே வேளையில், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருட்களுக்கு இந்த நாடு பலியாக இடமளிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

இளைய தலைமுறையினர், தாய்நாட்டின் பொறுப்பை தங்கள் தோள்களில் ஏற்று, தங்கள் எதிர்காலத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் சாதகமான திசையில் கொண்டு செல்ல பாடுபட வேண்டும் என்றும், இன்று இலங்கை பொலிஸ் நிரந்தர சேவையில் இணைவது வலுவான முன்னெடுப்பாகும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அவசர நிலைமைகளில் பிரஜைகளுக்கு விசேட அதிரடிப்படை வழங்கி வரும் சேவை மிகவும் பாராட்டத்தக்கது என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த அணிவகுப்பில் 118 உப பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 231 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் தங்கள் அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து வெளியேறினர்.பயிற்சி நெறியின் போது விசேட திறமையை வெளிப்படுத்திய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கினார்.

பயிற்சி பெற்று வெளியேறும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கப்பட்டது.

போர் களத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் கண்காட்சியொன்றும் இங்கு காண்பிக்கப்பட்டது.

1983 ஆம் ஆண்டு “நியதை ஜய” (வெற்றி நிச்சயம்) என்ற தொனிப்பொருளுடன் நிறுவப்பட்ட இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை தற்போது பிரபுக்கள் பாதுகாப்பு, குற்றங்கள், திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுத்தல் மற்றும் போதைப்பொருளற்ற நாட்டை உருவாக்குதல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு என்பவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கீர்த்திமிக்க பிரிவாகும்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சமந்த டி சில்வா, பொலிஸ் அதிகாரிகள், பயிற்சி பெற்று வெளியேறும் பொலிஸ் அதிகாரிகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related

Tags: Anura KumaraKatukurundaஅநுர குமா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு!

Next Post

சீனா மீது புதிய 50% வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!

Related Posts

தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மீனவர்கள் கைது!
இலங்கை

தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மீனவர்கள் கைது!

2025-07-26
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!
இலங்கை

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!

2025-07-26
இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்!
இலங்கை

இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்!

2025-07-26
குழந்தையின் பொம்மையின் மூலம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!
இலங்கை

குழந்தையின் பொம்மையின் மூலம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

2025-07-26
வெளிநாடுகளில் மறைந்திருக்கும் இலங்கை குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவிப்பு!
இலங்கை

வெளிநாடுகளில் மறைந்திருக்கும் இலங்கை குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவிப்பு!

2025-07-26
யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!
இலங்கை

யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!

2025-07-26
Next Post
சீனா மீது புதிய 50% வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!

சீனா மீது புதிய 50% வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!

2025 IPL; 12 ஓட்டங்களால் மும்பையை வீழ்த்திய பெங்களூரு!

2025 IPL; 12 ஓட்டங்களால் மும்பையை வீழ்த்திய பெங்களூரு!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

2025-07-20
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

2025-07-02
இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2025-07-18
அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

2025-06-29
தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மீனவர்கள் கைது!

தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மீனவர்கள் கைது!

0
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!

0
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு !

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு !

0
இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்!

இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்!

0
குழந்தையின் பொம்மையின் மூலம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

குழந்தையின் பொம்மையின் மூலம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

0
தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மீனவர்கள் கைது!

தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மீனவர்கள் கைது!

2025-07-26
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!

2025-07-26
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு !

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு !

2025-07-26
இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்!

இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்!

2025-07-26
குழந்தையின் பொம்மையின் மூலம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

குழந்தையின் பொம்மையின் மூலம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

2025-07-26

Recent News

தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மீனவர்கள் கைது!

தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மீனவர்கள் கைது!

2025-07-26
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!

2025-07-26
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு !

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு !

2025-07-26
இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்!

இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்!

2025-07-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.