ஜேர்மனியில் நடைபெற்றுவரும் மூனீச் ஓபன்(Munich Open) டென்னிஸ் தொடரில் ஜேர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் (Alexander Zverev) 3 ஆவது முறையாகவும் சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார்.
இதன்போது அதிரடியாக ஆடிய ஸ்வரேவ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
ஸ்வரேவின் பிறந்த நாளான நேற்று அவர் சம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.