அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழல் சம்பவங்கள் தொடர்பாக 50 வழக்குகளைத் தாக்கல் செய்ய இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) நடவடிக்கை எடுத்து வருகிறது.
இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் கூற்றுப்படி, இந்த வழக்குகள் நீண்டகால இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைகளுடன் தொடர்புடையவை, அவை முடிக்கப்பட்டுள்ளன, ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த வழக்குகளில் பல சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று இலஞ்ச ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.