துருக்கியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை நேரப்படி நண்பகல் 3.19 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், இது இஸ்தான்புல்லுக்கு அருகிலுள்ள மர்மாரா கடலில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் இது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.