கனடாவில் 3 நாட்களுக்கு முன்னர் மாயமான இந்தியாவைச் சேர்ந்த 21 வயதான மாணவி கடற்கரையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப்பைச் சேர்ந்த வன்ஷிகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனவும், இவர் கனடாவில் உள்ள ஒட்டாவா நகரில் கல்லூரி ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆம் திகதி இவர் மாயமாகியுள்ளளார் எனவும், வாடகைக்கு அறை ஒன்றை காணச் சென்ற வேளையில் அவர் மாயமாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது தொலைபேசியும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை தீவிரமாக தேடி வருவதாக தூதரகமும் அறிவித்து இருந்திருந்த நிலையில் வன்ஷிகாவின் உடல் கல்லூரி அருகில் உள்ள கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனை தூதரகமும் உறுதிப்படுத்தியுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து உரிய துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், மாணவி எப்படி உயிரிழந்தார் கொல்லப்பட்டாரா, உடன் சென்றவர்கள் யார், தொலைபேசி எங்கே என்ற விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.