மதுரு ஓயாவில் இன்று காலை இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரு ஓயாவில் இன்று காலை 8.17 மணியளவில் விமானப்படைக்குச் சொந்தமான ‘பெல் 212‘ ரக ஹெலிகொப்டரொன்று விபத்துக்குள்ளானது.
இதன்போது ஹெலிகொப்டரில் இருந்த 12 பேர் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.