இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டநிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.
இதேவேளை, நாளைய தினம் மே 12 ஆம் திகதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தை தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல் தொடர் எதிர் வரும் வியாழன்(15) அல்லது வெள்ளிக்கிழமை(16) மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் – டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி மீண்டும் முதலில் இருந்து ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.