நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் 10 பிரபல பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்வதற்காக இலங்கை பாதுகாப்பு தரப்பு சர்வதேச ரீதியில் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் சமீபத்தில் நடந்த பல கொலை சம்பவங்களில் அவர்களும் அவர்களது குழுக்களும் நேரடியாக ஈடுபட்டிருப்பதால் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அவர்களின் உண்மையான கடவுச்சீட்டுக்கள் மற்றும் போலி கடவுச்சீட்டுக்கள் தற்போது பொலிஸாரால் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச உளவாளிகள் மூலம் அவர்களைப் பற்றிய உளவுத்துறை தகவல்கள் பெறப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.