பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன், தனக்கு எதிரான தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முன் திங்கள்கிழமை (19) ஆஜராக உள்ளார்.
மே 19, 2025 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு முன்னிலையாக திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக் குழு உயர் நீதிமன்ற நீதிபதி பி.பி. சூரசேன தலைமையில் செயல்படுகிறது.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஏப்ரல் 08 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்றை நியமிப்பது தொடர்பான பிரேரணை முன்வைப்பதற்கான தீர்மானம் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் 115 பேரின் கையொப்பத்துடன் கடந்த மார்ச் 25 ஆம் திகதி சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது.
இதேவேளை, குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தின் பின்னர் குழு நிலையில் சட்டமூலம் ஆராயப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது மதிப்பீட்டையடுத்து வாக்கெடுப்பு இன்றி இச்சட்டமூலம் ஏப்ரல் 08 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி நாடளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.















