முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் பதிவு செய்வதற்காக சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், எந்த சம்பவம் அல்லது வழக்கு தொடர்பாக அவர் வாக்குமூலம் அளிக்க வந்துள்ளார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.