2018 தாக்குதலுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் ஒன்பது தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் கூறுகிறது.
ஈரானிய நீதித்துறையின் மிசான் செய்தி நிறுவனம் செவ்வாயன்று (10) மரண தண்டனையை அறிவித்தது.
மூன்று ஈரானிய படையினரை கொன்ற ஈரானின் துணை இராணுவப் புரட்சிகர காவல்படையுடன் மோதலில் ஈடுபட்ட பின்னர் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டதாக அது விவரித்தது.
ஈரான் தூக்கிலிடுவதன் மூலம் மரண தண்டனையை நிறைவேற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.