• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கேட்ஸ் நிதியத்தின்  பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்  விசேட சந்திப்பு!

கேட்ஸ் நிதியத்தின்  பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட சந்திப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/07/11
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், கேட்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அபிவிருத்திப் பிரிவின் தலைவர் கலாநிதி கிறிஸ் எலியாஸ்(Dr. Chris Elias)  தலைமையிலான கேட்ஸ் நிதியத்தின் உயர்மட்டக் குழுவிற்கும் இடையேயான சந்திப்பு நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் அபிவிருத்தி  தொடர்பான பல முக்கியமான  விடயங்கள் பற்றி இங்கு ஆராயப்பட்டது. விவசாய நவீனமயமாக்கல், உணவு மற்றும் ஊட்டச்சத்து, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் கிராமப்புற சமூகங்களை புதிய தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

blank

கேட்ஸ் நிதியம் இந்நாட்டில் செயல்படுத்த எதிர்க்கும் ஒரு முதன்மைத் திட்டமான உள்ளடக்கிய டிஜிட்டல் விவசாய  பரிமாற்றத் திட்டம் (Inclusive Digital Agriculture Transformation)  குறித்து கலாநிதி எலியாஸ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு தெளிவுபடுத்தினார். விவசாயத் துறையில் தரவு அடிப்படையிலான முடிவெடுப்பதை  ஒத்துழைக்கும் அதேவேளை சிறிய அளவிலான விவசாயிகளுக்கு சேவைகளை வழங்குவதும் முக்கியம் என்று சுட்டிக்காட்டினார்.

இந்தத் திட்டம் விவசாய நவீனமயமாக்கல் மற்றும் கிராமப்புற சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இரு தரப்பினரின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கூறினார்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் சவால்களை எதிர்கொள்வதன் மூலம் கேட்ஸ் நிதியம் பெற்றுள்ள நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை ஜனாதிபதி பாராட்டினார்.

நவீன உலகளாவிய தொழில்நுட்பங்களுடன் கிராமப்புற சமூகங்களை ஒருங்கிணைக்கும் நாட்டின் முயற்சிகளை ஆதரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கேட்ஸ் நிதியத்திடம் கோரிக்கை விடுத்ததோடு  இலங்கையுடனான அதன் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.

டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான இலங்கையின் மூலோபாயத் திட்டத்தை ஆதரிப்பதாகக் கூறிய கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகள், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் வளர்க்கவும் விவசாயத் துறையின் டிஜிட்டல் மாற்றத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறினர்.

 

blank

 

கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி போன்ற துறைகளை உள்ளடக்கிய ஒரு விரிவான சமூக-பொருளாதார அபிவிருத்தி  நிகழ்ச்சி நிரலுக்கு   முழு ஆதரவளிப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.

நாட்டின் பிரஜைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கமும் ஜனாதிபதியும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்கு நன்றி தெரிவித்த கலாநிதி கிறிஸ் எலியாஸ், இலங்கையில் நடைபெற்று வரும் புதிய மாற்றத்தைப் பாராட்டினார். இலங்கையுடன் ஒரு பரந்த உறவை ஏற்படுத்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்தார்.

அனைத்தையும் உள்ளடக்கி அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி  நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்த பங்களிக்க முடிந்ததற்கு நன்றி தெரிவித்த அவர், விவசாயம், உணவு மற்றும் ஊட்டச்சத்து மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் முன்னேற்றம் மற்றும் நிலையான தீர்வுகளுக்கான பொதுவான கருத்தாடலை  உருவாக்குவதற்கான இரு தரப்பினரின் உறுதிப்பாட்டை இந்த ஒத்துழைப்பு பிரதிபலிக்கிறது என்றும் கூறினார்.

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி  நந்திக சனத் குமாநாயக்க, டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்  கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, கேட்ஸ் நிதியத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான பிராந்திய பிரதிநிதி  கலாநிதி  ஜமால் கான், திட்ட ஆலோசனை ,தகவல் தொடர்பு, அபிவிருத்தி  மற்றும் வாய்ப்புகள்  தொடர்பான பணிப்பாளர் அர்ச்சனா வியாஸ், தொழில்முனைவு தரவு தீர்வு தொடர்பான பணிப்பாளர்  துஷான் விஜேசிங்க, Connect To Care  தலைவர் சந்தித சமரநாயக்க ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related

Tags: Sri Lankaகேட்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

$4 டிரில்லியனை விஞ்சிய என்விடியாவின் சந்தை மதிப்பு!

Next Post

மத்தள விமான நிலையம் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம்!

Related Posts

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!
இலங்கை

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரிப்பு!

2025-12-07
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை தொடரும் இலங்கை விமானப்படை.!
இலங்கை

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை தொடரும் இலங்கை விமானப்படை.!

2025-12-07
தமிழக முதல்வர் மற்றும் மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்!
இலங்கை

தமிழக முதல்வர் மற்றும் மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்!

2025-12-07
சேருநுவர கந்தளாய் பிரதான வீதி ஓரம்  ஒரு கிலோமீட்டர் துரம் பாதிப்பு !
இலங்கை

சேருநுவர கந்தளாய் பிரதான வீதி ஓரம் ஒரு கிலோமீட்டர் துரம் பாதிப்பு !

2025-12-07
வடக்கில் நிவாரணப் பணிகளில் எந்த அதிகாரியும் தவறிழைக்க முடியாது – வட மாகாண ஆளுநர் எச்சரிக்கை!
இலங்கை

வடக்கில் நிவாரணப் பணிகளில் எந்த அதிகாரியும் தவறிழைக்க முடியாது – வட மாகாண ஆளுநர் எச்சரிக்கை!

2025-12-07
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

2025-12-07
Next Post
மத்தள விமான நிலையம் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம்!

மத்தள விமான நிலையம் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம்!

செம்மணியில் புத்தகப் பை, பொம்மையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில்  நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

செம்மணியில் புத்தகப் பை, பொம்மையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இங்கிலாந்தின் வர்த்தக சீர்திருத்தத்தால் இலங்கைக்கு நன்மை!

இங்கிலாந்தின் வர்த்தக சீர்திருத்தத்தால் இலங்கைக்கு நன்மை!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை தொடரும் இலங்கை விமானப்படை.!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை தொடரும் இலங்கை விமானப்படை.!

0
தமிழக முதல்வர் மற்றும் மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்!

தமிழக முதல்வர் மற்றும் மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்!

0
சேருநுவர கந்தளாய் பிரதான வீதி ஓரம்  ஒரு கிலோமீட்டர் துரம் பாதிப்பு !

சேருநுவர கந்தளாய் பிரதான வீதி ஓரம் ஒரு கிலோமீட்டர் துரம் பாதிப்பு !

0
வடக்கில் நிவாரணப் பணிகளில் எந்த அதிகாரியும் தவறிழைக்க முடியாது – வட மாகாண ஆளுநர் எச்சரிக்கை!

வடக்கில் நிவாரணப் பணிகளில் எந்த அதிகாரியும் தவறிழைக்க முடியாது – வட மாகாண ஆளுநர் எச்சரிக்கை!

0
சூடானில் ஆயுத குழுக்களின் ட்ரான் தாக்குதலில்  பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் உயிரிழப்பு!

சூடானில் ஆயுத குழுக்களின் ட்ரான் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் உயிரிழப்பு!

0
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை தொடரும் இலங்கை விமானப்படை.!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை தொடரும் இலங்கை விமானப்படை.!

2025-12-07
தமிழக முதல்வர் மற்றும் மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்!

தமிழக முதல்வர் மற்றும் மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்!

2025-12-07
சேருநுவர கந்தளாய் பிரதான வீதி ஓரம்  ஒரு கிலோமீட்டர் துரம் பாதிப்பு !

சேருநுவர கந்தளாய் பிரதான வீதி ஓரம் ஒரு கிலோமீட்டர் துரம் பாதிப்பு !

2025-12-07
வடக்கில் நிவாரணப் பணிகளில் எந்த அதிகாரியும் தவறிழைக்க முடியாது – வட மாகாண ஆளுநர் எச்சரிக்கை!

வடக்கில் நிவாரணப் பணிகளில் எந்த அதிகாரியும் தவறிழைக்க முடியாது – வட மாகாண ஆளுநர் எச்சரிக்கை!

2025-12-07
சூடானில் ஆயுத குழுக்களின் ட்ரான் தாக்குதலில்  பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் உயிரிழப்பு!

சூடானில் ஆயுத குழுக்களின் ட்ரான் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் உயிரிழப்பு!

2025-12-07

Recent News

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை தொடரும் இலங்கை விமானப்படை.!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை தொடரும் இலங்கை விமானப்படை.!

2025-12-07
தமிழக முதல்வர் மற்றும் மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்!

தமிழக முதல்வர் மற்றும் மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்!

2025-12-07
சேருநுவர கந்தளாய் பிரதான வீதி ஓரம்  ஒரு கிலோமீட்டர் துரம் பாதிப்பு !

சேருநுவர கந்தளாய் பிரதான வீதி ஓரம் ஒரு கிலோமீட்டர் துரம் பாதிப்பு !

2025-12-07
வடக்கில் நிவாரணப் பணிகளில் எந்த அதிகாரியும் தவறிழைக்க முடியாது – வட மாகாண ஆளுநர் எச்சரிக்கை!

வடக்கில் நிவாரணப் பணிகளில் எந்த அதிகாரியும் தவறிழைக்க முடியாது – வட மாகாண ஆளுநர் எச்சரிக்கை!

2025-12-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.