இந்த ஆண்டு தொடக்கத்தில் எப்பிங்கில் 14 வயது சிறுமியையும் ஒரு பெண்ணையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்காக 12 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட தற்செயலாக விடுவிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளரைத் தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த எத்தியோப்பிய நாட்டவரான சந்தேகேநபர் பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமைக்கு முயற்சி, ஒரு பெண்ணை பாலியல் செயலில் ஈடுபடத் தூண்டுதல் மற்றும் வன்முறை இல்லாமல் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.
கடந்த மாதம் அவருக்கு 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் உடனடியாக நாடு கடத்தப்படவிருந்ததால் குடியேற்ற அமலாக்கத்தால் அவர் அழைத்துச் செல்லப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று அவர் தற்செயலாக விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தப்பி சென்றிருக்கலாம் எனும் சந்தேகத்தில் எசெக்ஸ் காவல்துறையினர் அவரைத் தேடும் பணியை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் புகலிடம் கோரியவர் நண்பகலுக்குப் பின்னர் லண்டனுக்குச் செல்லும் ரயிலில் ஏறியதாகதெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவரை விடுவித்தமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுவரும் நிலையில் அவர் தேடும் பணியை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
















