எட்டு ஆண்களில் ஒருவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதாக இங்கிலாந்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் மொத்தம் 58,218 ஆண்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டகாக கண்டறியப்பட்டனர்.
இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 9% அதிகரிப்பு என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இங்கிலாந்தில் இந்த நோய் குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாக சந்தேகிக்கும் ஆண்கள் ஒரு நாளுக்குள் நோயறிதலை மேற்கொள்ள இங்கிலாந்தில் புதிய சோதனை முறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதன்படி, MRI ஸ்கேன்களில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சில நிமிடங்களில் உடலில் இருக்கும் சிக்கலான படையணிகளைக் கண்டறிய கூடிய முறைகள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளன.
இதில் புற்றுநோய்க்கான அதிக ஆபத்து இருப்பதாக ஸ்கேன் முடிவு செய்தால், அது முன்னுரிமை மதிப்பாய்வுக்காக ஒரு கதிரியக்க நிபுணருக்கு அனுப்பப்படுவதுடன் அதே நாளில் நோயாளி செல் பரிசோதனைக்கு முன்பதிவு செய்யப்படுவார்.
இந்த தொழில்நுட்பம் ஆரம்பத்தில் 15 மருத்துவமனைகளில் சோதனை செய்யப்படும் என்றும், இந்த அணுகுமுறை ஆண்களின் நோய் குறித்த காத்திருப்பைக் குறைக்கும் என்றும் கூறுகிறது.
இந்நிலையில் தற்போது, புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாக சந்தேகிக்கும் ஆண்கள் தங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் இந்த நோயறிதல் முறையினையும் செல் பரிசோதனையையும் மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
















