• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/12/01
in இலங்கை, முக்கிய செய்திகள்
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய கடற்படையின் மகத்தான உதவி!

இந்திய அரசின் சார்பாக, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய கடற்படைக் கப்பல்களான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி ஆகியவை பேரிடர் நிலையினை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளன.

ஒற்றுமையின் அடையாளமாக, இந்தியா ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ் நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கிய மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) ஆதரவை அனுப்பியுள்ளது.

உதவின் பொருட்களில் 4.5 தொன் உலர் உணவுப் பொருட்கள், 2 தொன் சமைத்த உணவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய நிவாரணப் பொருட்களும் அடங்கும்.

Image

Image

Image

 

மோசமான வானிலை: சுமார் 100 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மேலும் பல இறப்புகள் பதிவாகியுள்ளன. 

பதுளை மாவட்டத்தில் மாத்திரம் பேரழிவு காரணமாக 35 பேர் இறந்துள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில், கண்டி மாவட்டத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 67 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். 

கண்டியின் ஹசலகாவில் உள்ள யஹங்கல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஐந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளனர். 

மேலும், கேகாலையின் புலத்கோஹுபிட்டியவில் உள்ள தேதுகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 12 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின் தடையினால் 7 மில்லியன் நுகர்வோர் பாதிப்பு!

பாதகமான வானிலை காரணமாக நாட்டின் மின்சார விநியோகத்தில் சுமார் 25%–30% பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஷெர்லி குமார தெரிவித்தார்.

இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், மின்சாரத்தை மீட்டெடுப்பது கடினமான பணியாக மாறியுள்ளது என்றும், கிழக்கு, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களே மின் தடையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ரந்தெனிகல, ரந்தம்பே மற்றும் மஹியங்கனையை இணைக்கும் 132,000 கிலோவோட் திறன் கொண்ட ஒரு முக்கிய மின்மாற்றி இணைப்பு உடைந்து தற்போது பழுதுபார்ப்புக்கு அணுக முடியாத நிலையில் உள்ளது. 

இதன் விளைவாக, கொத்மலை மற்றும் ரந்தம்பே நீர் மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

பல மின்மாற்றப் பாதைகளில் உள்ள கோபுரங்கள் சேதமடைந்துள்ளன அல்லது நீரில் மூழ்கியுள்ளன.

இதனால் வெள்ள நீர் வடியத் தொடங்கும் வரை பழுதுபார்ப்பு சாத்தியமற்றது.

நீர் கசிவு மற்றும் சேற்று நீர் வரத்து காரணமாக போவதென்ன மற்றும் மேல் கொத்மலை மின் நிலையங்கள் மேலதிக மூடல்களில் அடங்கும்.

தற்போது, ​​கொத்மலையின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் இரண்டு மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

ஏனைய நிலையங்கள் அதிகபட்ச திறனில் இயங்குகின்றன. 

இருப்பினும், துணை மின் நிலையங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் பேராதெனிய பல்கலைக்கழகம் மற்றும் கண்டி நகரம் உட்பட பரவலான பகுதிகளில் மின் தடைகள் தொடர்கின்றன.

பொது பாதுகாப்பு மற்றும் உபகரணங்கள் சேதமடைவதைத் தடுக்க சில மின் இணைப்புகள் வேண்டுமென்றே நிறுத்தப்பட்டுள்ளன.

அத்தியாவசிய சேவைகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

வீட்டு இணைப்புகள் பின்னர் கருத்திற் கொள்ளப்படும்.

மின் தடையினால் சுமார் 7 மில்லியன் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீர் மட்டம் குறைந்த பின்னரே பழுதுபார்ப்பு தொடர முடியும் என்றும் குறிப்பிட்டார்.

 

தெஹிவளை, பின்னவல விலங்கியல் பூங்காக்களுக்கு பூட்டு!

நிலவும் மோசமான வானிலையால் தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா மற்றும் பின்னவல விலங்கியல் பூங்காக்கள் பொதுமக்களின் பார்வைக்காக மூடப்பட்டிருக்கும் என்று தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் தகவலின்படி, தெஹிவளை மற்றும் பின்னவல விலங்கியல் பூங்காக்கள் நாளை (29) மூடப்படும்.

எனினும், பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் ரிதியகம சஃபாரி பூங்கா ஆகியவை பொதுமக்களுக்கு தொடர்ந்து திறந்திருக்கும்.

blank

மீட்பு பணிகளுக்காக இந்தியாவின் ஹெலிகொப்டர்கள்!

இலங்கையில் நிலவும் பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மீட்பு நடவடிக்கைகளுக்கு ஹெலிகொப்டர்களை வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்திய விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் தற்போது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

மேலும் அதில் உள்ள ஹெலிகொப்டர்கள் இந்த மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிக்கைகளின்படி, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மூலம் இலங்கை அரசாங்கம் விடுத்த முறையான கோரிக்கையைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

Image

3,000 மக்களுக்கு பேரிடர் மையமாக மாறும் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானம்!

கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடம் மற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிராந்திய மேம்பாட்டுக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. 

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் பாதகமான வானிலை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்க மைதானம் நிவாரண பேரிடர் மையமாக மாற்றப்பட்டு வருவதாக ஊடகங்களிடம் உரையாற்றும் போது பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஹே தெரிவித்தார். 

வடக்கு கொழும்பு, கடுவலை மற்றும் கொலன்னாவ உள்ளிட்ட கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அவர் வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். 

இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மேலதிக தங்குமிடம் மற்றும் நிவாரண சேவைகளை வழங்குவதற்காக பாடசாலைகள் மற்றும் மத நிறுவனங்களை தற்காலிக தங்குமிடங்களாக மாற்றுவதற்கும் தற்காலிக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

R. PREMADASA STADIUM (2025) All You Need to Know BEFORE You Go (with Photos) - Tripadvisor

அவசர உதவிக்காக 47 பொலிஸ் பிரிவு துரித இலக்கங்கள்!

நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக, பேரிடர் சூழ்நிலைகள் குறித்து பொதுமக்களுக்கு தகவல் மற்றும் உதவிகளை வழங்க இலங்கை பொலிஸார் பிரத்யேக தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், தற்போதைய அவசரகாலத்தின் போது சரியான ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ்மா அதிபரின்மேற்பார்வையின் கீழ் ஒரு சிறப்பு செயல்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது.

blank

blank

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

நாவலப்பிட்டியில் உள்ள பழைய ரயில்வே யார்டு சாலையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (28) மண்மேடு சரிந்து வீழந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

நாவலப்பிட்டி பொலிஸாரின் கூற்றுப்படி, இறந்தவர்கள் ஒரு பெண், அவரது மாமியார் மற்றும் மூன்று மாதக் குழந்தையும் அடங்குவர்.

நாவலப்பிட்டி பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகளுடன் உள்ளூர்வாசிகள் விரிவான மீட்பு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.

இறந்தவர்களின் உடல்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

மோசமான வானிலை காரணமாக, நாவலப்பிட்டி பகுதியில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

அதே நேரத்தில் கிட்டத்தட்ட 50 குடும்பங்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பிரதேச செயலாளர் ரம்யா ஜெயசுந்தர தெரிவித்தார்.

No photo description available.

பல முக்கிய ஆறுகளை அண்மதித்த பகுதிகளுக்கு கடும் வெள்ள எச்சரிக்கை அபாயம்!

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.

இதனால், நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று (28) வெளியிட்ட நதி நீர் மட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல அதிகாரப்பூர்வ கண்காணிப்பு நிலையங்களில் நீர் மட்டங்கள் இப்போது சிறிய வெள்ள நிலைகளிலிருந்து பெரிய வெள்ள நிலைகளாக உயர்ந்துள்ளன என்பது காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, களனி ஆறு, மாணிக்க கங்கை, மகாவலி ஆறு, மல்வத்து ஓயா, தெதுரு ஓயா மற்றும் மகா ஓயா உள்ளிட்ட பல முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

நில்வல கங்கை, கிரிந்தி ஓயா, யான் ஓயா மற்றும் மா ஓயா ஆகிய நீர் படுகைகளை அண்மித்த பகுதிகளிலும் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.

களனி ஆற்றுப் படுகையின் பல இடங்களில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால், களனி பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் இப்போதிலிருந்தும் அடுத்த 24 மணி நேரத்திற்கும் – அண்மைய வரலாற்றில் இல்லாத அளவுக்கு – அதிக ஆபத்துள்ள வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசணத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

blank

மோசமான வானிலை: தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு!

நிலவும் மோசமான வானிலை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடுவலை வெளியேறும் பகுதி நீரில் மூழ்கியுள்ளது.

இதனால், கடவத்தை திசையில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக போக்குவரத்து ஒரு வழித்தடத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபைதெரிவித்துள்ளது.

இதனால், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவாவிலிருந்து கொழும்பு நோக்கி போக்குவரத்து ஒரு வழித்தடத்திற்கு மட்டுப்படுத்தப்படும்.

பொலன்னறுவை பாலத்தில் சிக்கித் தவித்த 13 பேரை மீட்ட விமானப்படை

ஹிங்குராக்கொடை விமானப்படை தளத்தில் உள்ள எண் 07 படைப்பிரிவிலிருந்து பெல் 212 ஹெலிகொப்டர் இன்று வரை 03 மீட்புப் பணிகளை முடித்துள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

பொலன்னறுவையின் மனம்பிட்டி பாலத்தில் சிக்கித் தவித்த 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிலவும் மோசமான வானிலைக்கு மத்தியிலும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொலிஸாரின் அனைத்து விடுமுறையும் இரத்து!

மோசமான வானிலை காரணமாக பொலிஸ் அதிகாரிகளின் அனைத்து விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவு நவம்பர் 30 வரை அமுலில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சருமான எப்.யூ. வுட்லர் தெரிவித்தார்.

நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக எந்தவொரு அதிகாரியும் தாம் நியமிக்கப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்க முடியாவிட்டால், அவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கடமைக்காக சமூகமளிக்க வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

அவசரநிலை ஏற்பட்டால், பொதுமக்கள் பின்வரும் துரதி எண்களை தொடர்பு கொள்ளலாம்: 117, 119, 1990 சுவசெரிய சேவை, 110 தீயணைப்பு சேவை, 113 இராணுவத் தலைமையகம் மற்றும் 116 விமானப் படை தலைமையகம்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அப்டேட்!

இன்று (28) பயணிக்க முன்பதிவு செய்த பயணிகள், கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன், அண்மைய விமான சேவை நிலைமைகளை சரிபார்க்குமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவுறுத்தியுள்ளது.

விமான நிலையத்தின் www.srilankan.com என்ற இணையத்தளம் அல்லது 1979 (இலங்கைக்குள்) அல்லது +94117 771979 (சர்வதேசம்) என்ற துரத இலக்கங்கள் மூலம் தகவல்களை சரிபார்க்கலாம்.

இதற்கிடையில், இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் மற்றும் புறப்படும் விமானங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

விமான நிலைய கடமை மேலாளரின் கூற்றுப்படி, பல விமானங்கள் கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் மத்தளவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக 1.2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கம்! 

இலங்கையின் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக இதுவரை 1.2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேலும், 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டில்,  மேலும் 30 பில்லியன் ரூபா அவசர தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம்  எச்.எஸ்.கே.ஜே. பண்டார தெரிவித்தார்.

தேவையான அளவிற்கு நிதியை கோருமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் தற்போது நடைபெறும் நிகழ்நிலை கலந்துரையாடலின் ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.  

எந்தவொரு தடையும் இன்றி செயல் திறனுடன் அனர்த்த நிவாரண பணிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியினால் அனைத்து தரப்பினருக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களுக்கு பெரும் வெள்ள அபாய எச்சரிக்கை!

அதிக மழைப்பொழிவு மற்றும் நீர்மட்டம் உயர்வதால் களு கங்கை படுக்கையின் தாழ்வான பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களுக்குள் பெரும் வெள்ள அபாயம் ஏற்படும் என்று நீர்ப்பாசணத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திணைக்களத்தின் தகவலின்படி, ஆபத்தில் உள்ள பகுதிகளில் பின்வருவன அடங்கும்:

இரத்தினபுரி மாவட்டம்: பெல்மதுல்ல, நிவித்திகலை, இரத்தினபுரி, குருவிட்டை, அயகம, எலபாத்தை

களுத்துறை மாவட்டம்: களுத்துறை, இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட, மில்லனிய, புலத்சிங்கள, பாலிந்தநுவர, மதுராவல, அகலவத்தை

குறித்தப் பகுதிகளில் வசிப்பவர்களும், அங்குள்ள வீதிகளினூடாக பயணிப்பவர்களும் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அதிகாரிகள் பிறப்பிக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

May be an image of text

கொழும்பு – கண்டி வீதியூடான போக்குவரத்து பாதிப்பு!

கேகாலை, மீபிட்டியவில் உள்ள 88 கி.மீ மற்றும் 89 கி.மீ மைல் கல்லுக்கு இடையிலான கொழும்பு-கண்டி பிரதான வீதியின் ஒரு பகுதி மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டுள்ளது.

வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தி விழிப்புடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) வலியுறுத்தியுள்ளது.

அத்தியாவசிய பயணங்களைத் தவிர, வீதியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் மேலும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

13 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

மோசமான வானிலையால் 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை நாளை (29) அதிகாலை 02.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக NBRO தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பதுளை, கொழும்பு, காலி, கேகாலை, குருநாகல், மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து ரயில் சேவைகளும் இரத்து!

நாடு முழுவதும் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, இன்று (நவம்பர் 28) காலை 6 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் உள்ள அனைத்து ரயில் சேவைகளையும் ரயில்வே திணைக்களத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல், வெள்ளம் மற்றும் பல ரயில் பாதைகளில் மரங்கள் விழும் அபாயம் அதிகரித்து வருகின்றது.

இதனால், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் சந்திரசேன பண்டாரா தெரிவித்தார்.

43,991 பேர் பாதிப்பு, 56 பேர் உயிரிழப்பு

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

இன்று (28) காலை வரையான தகவலின்படி, மோசமான வானிலை தொடர்பான அனர்த்த சம்பவங்களில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

14 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நான்கு வீடுகள் முழுமையாகவும், 666 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

blank

Related

Tags: Cyclone DitwahWeatherதித்வா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

Next Post

மோசமான வானில‍ை; 43,991 பேர் பாதிப்பு, 56 பேர் உயிரிழப்பு

Related Posts

மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!
ஆசிரியர் தெரிவு

மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

2025-12-01
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!
இலங்கை

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி
இலங்கை

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!
இலங்கை

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!
இலங்கை

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்
இலங்கை

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

2025-11-30
Next Post
மோசமான வானில‍ை; 43,991 பேர் பாதிப்பு, 56 பேர் உயிரிழப்பு

மோசமான வானில‍ை; 43,991 பேர் பாதிப்பு, 56 பேர் உயிரிழப்பு

அனைத்து ரயில் சேவைகளும் இரத்து!

அனைத்து ரயில் சேவைகளும் இரத்து!

8 மாதங்களில் 22 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டிய விமானத்துறை!

விமானநிலையங்களுக்கு செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

0
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

0
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

0
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

0
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

0
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

2025-12-01
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30

Recent News

மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

2025-12-01
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.