இங்கிலாந்து நிதி அமைச்சர் பொது நிதிகள் குறித்துப் பொய் கூறினார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அரசாங்கத்தின் சமீபத்திய வரவுசெலவுத் திட்டத்தை வன்மையாகப் பாதுகாக்கும் உரையை இன்று நிகழ்ந்தவுள்ளார்.
இந்த வரவுசெலவுத் திட்டம், 26 பில்லியன் பவுண்டுகள் வரி உயர்வுகளை உள்ளடக்கியிருந்தாலும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் தேசியப் புதுப்பித்தலை முன்னெடுப்பதற்கும் சரியான போக்கைத் தீர்மானிக்கும் என்று பிரதமர் ஸ்டார்மர் வாதிடுகிறார்.
அவரது அறிவிப்பின் ஒரு முக்கிய பகுதியானது, இதற்கு முன் தோல்வியடைந்த பின்னர், சமூக நல அமைப்பில் புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் உறுதிமொழியாகும்.
தற்போதுள்ள நலத்திட்ட அமைப்பு “உடைந்துவிட்டது” என்றும், இது குறிப்பாக இளைஞர்களை வேலையில் இருந்து விலக்கி அவர்களின் திறனைத் தடுப்பதாகவும் அவர் வாதிடுகிறார்.
ஸ்டார்மர் தனது திட்டங்களை முந்தைய கோ கன்செர்வேட்டிவ் அரசாங்கத்தின் தோல்விகளுடன் ஒப்பிடுகிறார், ஏனெனில் அவர்களின் கீழ் நலத்திட்டச் செலவு 88 பில்லியன் பவுண்டுகளால் அதிகரித்தது என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.
பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் அதே வேளையில், ஆற்றல் கட்டணங்களில் சலுகைகள் மற்றும் ரயில் கட்டணங்களை முடக்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைகளைக் குறைப்பதே வரவுசெலவுத் திட்டத்தின் நோக்கமாகும் .














