சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
குறைந்த எஞ்சின் கொள்ளளவு கொண்ட வாகனங்களின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, சாதாரண பொதுமக்கள் கொள்வனவு செய்யும் Alto, Wagon R, Yaris, Hustler போன்ற 1000cc வரம்பிற்குட்பட்ட வாகனங்களுக்கான வரியைக் குறைத்து வழங்குமாறு அவர் ஓரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான நிபந்தனைகளைத் தளர்த்துமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன்படி, அனர்த்த நிலைமையால் மக்களின் பொருளாதார மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது எனவும்
முன்பதிவு செய்தவர்களால் வாகனங்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் மூன்று மாதங்கள் கடந்தவுடன் 3% அபராதம் விதிக்கப்படுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, முடிந்தால் இந்த 3% அபராதத்தை நீக்கித் தருமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.














