இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்துக்காக 11 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் காரைநகர் கடல் பகுதியில் நேற்று (01) இரவு நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.
மீனவர்கள் பயன்படுத்திய படகையும், அவர்களின் மீன்பிடி உபகரணங்களையும் கடற்படை கைப்பற்றியது.
கைது செய்யப்பட்ட நபர்களை காங்கேசன்துறை கடற்படைத் தளத்திற்கு கொண்டு சென்று, மேலதிக விசாரணைகளுக்காக மீன்வளம் மற்றும் நீர்வளத் துறையிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.













