2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 158,787 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தின் முதல் 18 நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 28,686 ஆகும்.
அத்துடன், ரஷ்யாவிலிருற்து 16,956 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 15,189 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 10,837 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 7,399 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 7,508 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 6,841 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.













