• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு அரசின் மீள்-கட்டெழுப்பல் திட்டங்களில் பாரபட்சம் – மனோ கணேசன் குற்றச்சாட்டு

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு அரசின் மீள்-கட்டெழுப்பல் திட்டங்களில் பாரபட்சம் – மனோ கணேசன் குற்றச்சாட்டு

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/20
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

மலையக காணி உரிமையை, ஜிஎஸ்பி (GSP+)வரி சலுகை நிபந்தனையாக, வைக்க பிரான்ஸ் முன் வர வேண்டும் என பிரான்ஸ் தூதுவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

டித்வா புயல் அனர்த்தத்துக்குப் பின்னர் முன்னெடுக்கப்படும் இலங்கை மீள்-கட்டெழுப்பல் (Rebuilding Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் காணி வழங்கல் மற்றும் வீடு கட்டல் தொடர்பான அரசாங்க செயற்பாடுகளில், மலையக பெருந்தோட்ட மக்களுக்கு எதிராக வெளிப்படையான பாரபட்சம் காட்டப்படுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி யின்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடு கட்டல் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் ரூபா 50 இலட்சம் செலவில் அரசாங்கம் வீடுகளை கட்டி வழங்கும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ள நிலையில், இந்த சலுகை அனுராதபுர மாவட்டத்துடன் மட்டுமல்லாது, கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை, கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்புகளை எதிர்கொண்ட மலையக தமிழ் மக்களுக்கு வழங்கப்படாமல் விலக்கி வைக்கப்படுவதாக மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.

இந்த இரட்டை நிலை அரசாங்க அணுகுமுறைகள் குறித்து தானும் தனது குழுவும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லாம்பெர்ட்டிடம் தெளிவாக எடுத்துரைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மனோ கணேசன் எம்பி தலைமையிலான த.மு.கூ பிரதிநிதிக் குழு, கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் பிரான்ஸ் தூதுவர் ரெமி லாம்பெர்ட்டை சந்தித்து கலந்துரையாடியது. இந்தச் சந்திப்பில் த.மு.கூ பிரமுகர்களான பேராசிரியர் விஜயசந்திரன், பாரத் அருள்சாமி, புஷ்பநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பு தொடர்பில், மனோ கணேசன் தனது எக்ஸ் (X) சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், டித்வா பேரழிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட மலையக தமிழ் மக்கள், குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், அரசின் மீள்-கட்டெழுப்பல் வீடமைப்பு திட்டத்திலிருந்து திட்டமிட்ட முறையில் விலக்கப்பட்டுவருவதாக உண்மை ஆதாரங்களுடன் பிரான்ஸ் தூதுவரிடம் விளக்கமளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ உறுதிமொழிகள் இருந்தபோதிலும், இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட வேண்டிய ரூபா 5 மில்லியன் நிதியுதவியும், காணி ஒதுக்கீடும் பெருந்தோட்ட சமூகத்திற்கு மறுக்கப்படுவது கவனயீனம் அல்ல, திட்டமிட்ட பாகுபாடு என அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், மலையக சமூகத்துக்கே உரிய இன்னும் தீர்க்கப்படாத அநீதிகள் குறித்து விவாதிக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் சிவில் அமைப்புகள் சார்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களை சந்திக்க பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், அவை திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்தப் பாகுபாட்டு நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மலையக மக்களுக்கு சம உரிமை, சம வளங்கள் மற்றும் சம மரியாதை உறுதி செய்யவும், இலங்கை அரசுடன் கொண்டுள்ள தனது நல்லுறவுகளை பிரான்ஸ் பயன்படுத்த வேண்டும் எனவும் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி உறுப்பு நாடான பிரான்ஸ், மலையக தமிழ் சமூகத்தின் காணி மற்றும் வீட்டு உரிமைகளை, இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் ஜீஎஸ்பி+ (GSP+) வரிச்சலுகைகளுக்கான முக்கிய நிபந்தனைகளாக முன்வைக்க வேண்டும் எனவும் த.மு.கூ சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

 

Related

Tags: French AmbassadorGSP+manoganesanRebuilding Sri Lanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்தின் சாகோஸ் ஒப்பந்தம் முட்டாள்தனமானது – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Next Post

கடந்த 05 ஆண்டுகளில் இங்கிலாந்து தொழில் சந்தை மோசமான சரிவில்!

Related Posts

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இலங்கை

பாட்டலி சம்பிக்கவின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

2026-01-20
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இலங்கை

யாழில். முதியவர் படுகொலை – இருவருக்கு மரண தண்டனை

2026-01-20
வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள் கண்களுக்கு தெரியவில்லையா ? – யாழில். போராட்டம்
இலங்கை

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள் கண்களுக்கு தெரியவில்லையா ? – யாழில். போராட்டம்

2026-01-20
நெடுந்தீவுக்கான வடதாரகையை விரைந்து இயக்குவதற்கு நடவடிக்கை
இலங்கை

நெடுந்தீவுக்கான வடதாரகையை விரைந்து இயக்குவதற்கு நடவடிக்கை

2026-01-20
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் பறிமுதல்
இலங்கை

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் பறிமுதல்

2026-01-20
வடக்கில் கல்வியில் அரசியல் தலையீடு என குற்றம் சாட்டும் இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர்
இலங்கை

வடக்கில் கல்வியில் அரசியல் தலையீடு என குற்றம் சாட்டும் இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர்

2026-01-20
Next Post
கடந்த 05 ஆண்டுகளில் இங்கிலாந்து தொழில் சந்தை மோசமான சரிவில்!

கடந்த 05 ஆண்டுகளில் இங்கிலாந்து தொழில் சந்தை மோசமான சரிவில்!

சிறந்த தொழில்நுட்ப திறமையாளர்களை ஈர்க்க விசா கட்டணங்களை திருப்பி செலுத்தவுள்ள இங்கிலாந்து!

சிறந்த தொழில்நுட்ப திறமையாளர்களை ஈர்க்க விசா கட்டணங்களை திருப்பி செலுத்தவுள்ள இங்கிலாந்து!

இலங்கையர்கள் இருவருக்கு மாலைத்தீவில் 15 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு!

இலங்கையர்கள் இருவருக்கு மாலைத்தீவில் 15 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

பாட்டலி சம்பிக்கவின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

0
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

யாழில். முதியவர் படுகொலை – இருவருக்கு மரண தண்டனை

0
வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள் கண்களுக்கு தெரியவில்லையா ? – யாழில். போராட்டம்

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள் கண்களுக்கு தெரியவில்லையா ? – யாழில். போராட்டம்

0
நெடுந்தீவுக்கான வடதாரகையை விரைந்து இயக்குவதற்கு நடவடிக்கை

நெடுந்தீவுக்கான வடதாரகையை விரைந்து இயக்குவதற்கு நடவடிக்கை

0
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் பறிமுதல்

0
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

பாட்டலி சம்பிக்கவின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

2026-01-20
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

யாழில். முதியவர் படுகொலை – இருவருக்கு மரண தண்டனை

2026-01-20
வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள் கண்களுக்கு தெரியவில்லையா ? – யாழில். போராட்டம்

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள் கண்களுக்கு தெரியவில்லையா ? – யாழில். போராட்டம்

2026-01-20
நெடுந்தீவுக்கான வடதாரகையை விரைந்து இயக்குவதற்கு நடவடிக்கை

நெடுந்தீவுக்கான வடதாரகையை விரைந்து இயக்குவதற்கு நடவடிக்கை

2026-01-20
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் பறிமுதல்

2026-01-20

Recent News

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

பாட்டலி சம்பிக்கவின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

2026-01-20
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

யாழில். முதியவர் படுகொலை – இருவருக்கு மரண தண்டனை

2026-01-20
வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள் கண்களுக்கு தெரியவில்லையா ? – யாழில். போராட்டம்

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள் கண்களுக்கு தெரியவில்லையா ? – யாழில். போராட்டம்

2026-01-20
நெடுந்தீவுக்கான வடதாரகையை விரைந்து இயக்குவதற்கு நடவடிக்கை

நெடுந்தீவுக்கான வடதாரகையை விரைந்து இயக்குவதற்கு நடவடிக்கை

2026-01-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.