2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் இன்று(01) தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து முன்னதாக கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன், கடந்த28 ஆம் திகதி , வரவுசெலவுத்திட்ட கூட்டத்தொடர் ஆரம்பமானது.
இந்நிலையில், 2026 – 27ம் நிதியாண்டுக்கானமத்திய வரவுசெலவு திட்டம் , பாராத்ய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமனால் இன்று காலை 11:00 மணிக்கு சமர்ப்பித்தார்.
இது அவர் தாக்கல் செய்யும் ஒன்பதாவது வரவுசெலவு திட்டம்.
இதன் மூலம், தொடர்ச்சியாக ஒன்பது மத்திய வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற உள்ளார்.
இந்நிலையில் டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னதாக சந்தித்து கலந்துரையாடினர்.
அவர் மத்திய வரவுசெலவு திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து திரவுபதி முர்முவிடம் விளக்கியா நிலையில் பின்னர் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.












