இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பட்டுள்ளன.
இதன் விளைவாக வொஷிங்டன் இந்தியப் பொருட்களுக்கான வரியை தற்போதைய 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கும்.
அதற்கு ஈடாக புது டெல்லி ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதை நிறுத்தி வர்த்தக தடைகளை குறைக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (03) தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி சமூக ஊடகங்களில் இந்த ஒப்பந்தத்தை அறிவித்தார்.
இந்தியா இப்போது அமெரிக்காவிலிருந்தும் வெனிசுலாவிலிருந்தும் எண்ணெய் வாங்கும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டார்.
அதேநேரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக ஊடகப் பதிவில்,
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு இப்போது 18 சதவீதம் வரி குறைக்கப்படும் என்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த அற்புதமான அறிவிப்புக்கு இந்தியாவின் 1.4 பில்லியன் மக்கள் சார்பாக ஜனாதிபதி ட்ரம்பிற்கு மிகுந்த நன்றி.
இரண்டு பெரிய பொருளாதாரங்களும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும் இணைந்து செயல்படும்போது, அது மக்களுக்கு பயனளிக்கிறது மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கான மகத்தான வாய்ப்புகளைத் திறக்கிறது – என்று கூறினார்.
இந்த அறிவிப்பானது கடுமையான வரிகளால் பாதிக்கப்பட்டிருந்த இந்தியா-அமெரிக்க உறவுகளில் ஒரு உருகலை அடையாளம் காட்டியது.
அமெரிக்காவின் பல கோரிக்கைகளை இந்தியா நிவர்த்தி செய்த பின்னரும், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பிற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் தீவிரமாக கையெழுத்திடத் தொடங்கிய பின்னரும் இந்த நடவடிக்கை வந்துள்ளது.













