முன்னாள் அமைச்சரும், தொழிலாளர் கட்சியின் (Labour Party) நாடாளுமன்ற உறுப்பினருமான துலிப் சித்திக், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பங்களாதேஷ் நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த விசாரணை முறையற்றது என தொழிலாளர் கட்சி விமர்சித்துள்ளது.
இந்த வழக்கில், பதவியிறக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (துலிப் சித்திக்கின் பெரியம்மா) மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கும் தனித்தனி ஊழல் வழக்குகளில் வெவ்வேறு கால அளவிலான சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தண்டனை பெற்ற அனைவரும் நேரில் ஆஜராகாத நிலையில் (in absentia) இந்த விசாரணை நடைபெற்றது.
அவர்கள் அனைவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
இது குறித்து தொழிலாளர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்:
துலிப் சித்திக் இந்த வழக்கில் நியாயமான சட்ட விசாரணையை எதிர்கொள்ளவில்லை எனவும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்கள் கூட அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை எனவும்
பங்களாதேஷ் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை எனவும் சட்டரீதியான பிரதிநிதித்துவத்திற்கு வாய்ப்பு வழங்கப்படாததால், இந்தத் தீர்ப்பை எங்களால் அங்கீகரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதற்கு முன்னரும் கடந்த 2025-ஆம் ஆண்டின் இறுதியில், துலிப் சித்திக்கிற்கு ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தாகாவின் புறநகர்ப் பகுதியில் ஒரு நிலத்தைப் பெறுவதற்கு, தனது பெரியம்மா ஷேக் ஹசீனாவின் “சிறப்பு அதிகாரத்தைப்” பயன்படுத்த தூண்டியதாக டிசம்பர் 2025-இல் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து துலிப் சித்திக் கருத்து தெரிவிக்கையில் , இந்த நடைமுறை ஆரம்பம் முதல் முடிவு வரை குறைபாடுகள் நிறைந்த ஒரு கேலிக்கூத்து எனவும் ஒன்றரை ஆண்டுகளாக தன் மீது அவதூறுகளைப் பரப்பும் பங்களாதேஷ் அதிகாரிகள், இதுவரை என்னைத் தொடர்பு கூட கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதை அடுத்து ஷேக் ஹசீனாவுடன் இருந்த தொடர்புகள் மற்றும் லண்டனில் அவரது நண்பர்களுக்கு சொந்தமான சொத்துக்களைப் பயன்படுத்தியது தொடர்பான கேள்விகள் எழுந்ததை அடுத்து,கடந்த 2025 ஜனவரி மாதம் பிரித்தானிய நிதி அமைச்சர் (Treasury minister) பதவியிலிருந்து துலிப் சித்திக் விலகியமை குறிப்பிடத்தக்கது.


















