ஓய்வுபெற்ற மைதான பராமரிப்பாளர் பிரையன் லோ சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட 77 வயது முன்னாள் காவலாளி மைதான பராமரிப்பாளர் மீது “தீராத பகை” இருந்ததாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கடந்த 2024 பிப்ரவரி மாதம் அபெர்பெல்டி (Aberfeldy) அருகே உள்ள ஒதுக்குப்புறமான பாதையில் 65 வயதான பிரையன் லோ என்பவரை, டேவிட் கேம்ப்பெல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இதேவேளை, ஓய்வுபெற்ற மைதான பராமரிப்பாளரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு, பாதிக்கப்பட்டவர் மீது கடும் வெறுப்பு இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தலைமை வேட்டைக்காப்பாளர் (gamekeeper) டேவிட் கேம்ப்பெல் (77), பிரையன் லோவை பெர்த்ஷையரில் உள்ள ஒரு பாதையில் வைத்து சுட்டுக்கொன்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கிளாஸ்கோ உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில், கேம்ப்பெல் தன் மீதான எட்டு குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
மேலும், கொலை நடந்த நேரத்தில் தான் வீட்டில் இருந்ததாகக் கூறி பாதுகாப்பையும் கோரியுள்ளார்.
இதேவேளை, உள்ளூர் விவசாயியான சாலி கிரிஸ்டல் (77) நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கும் போது, இருவரையும் தமக்குத் தெரியும் என்று கூறினார்.
ஆரம்பத்தில் இருவரும் இணக்கமாக இருந்ததாகவும், ஆனால் காலப்போக்கில் அவர்களுக்கிடையே
இதேவேளை சம்பவம் இடம்பெற்றபொழுது கேம்ப்பெல் திட்டமிட்டு சிசிடிவி (CCTV) கேமராக்களைச் செயலிழக்கச் செய்துவிட்டு இந்தக் கொலையைச் செய்ததாகவும்,
கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் பையை மறைத்தமை, மின்சார மிதிவண்டியின் டயர்களை மாற்றியது என ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















