தென்கொரியாவின் மக்கள் தொகை வீழ்ச்சியை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு தீர்வாக இலங்கை மற்றும் வியட்நாமில் இருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்வோம் என்று தெற்கு ஜியோல்லா மாகாணத்தின் ஜிண்டோ மாவட்ட மேயர் பரிந்துரைத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
தெற்கு ஜியோல்லா மாகாணத்தில் உள்ள ஹேனம் கலாச்சார கலை மையத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற நகர மண்டபக் கூட்டத்தின் போது இந்த விடயத்தில் அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் குவாங்ஜுவின் மேயர் காங் கி-ஜங் மற்றும் தெற்கு ஜியோல்லா மாகாண ஆளுநர் கிம் யுங்-ரோக் ஆகியோர் குவாங்ஜு மற்றும் தெற்கு ஜியோல்லாவின் நிர்வாக ஒருங்கிணைப்பு தொடர்பான குடியிருப்பாளர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்தனர்.
நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இதன்போது, நாடு முழுவதும் மக்கள் தொகை குறைந்து வரும் 89 பகுதிகளில் இருபது சதவீதம் எங்கள் மாகாணத்தில் உள்ளன என்று ஜிண்டோ மாவட்ட மேயர் கிம் ஹீ-சூ கூறினார்.
ஒருங்கிணைப்பு என்ற சாக்குப்போக்கின் கீழ் அழிவின் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான எதிர் நடவடிக்கைகளை சட்டமாக்குவது நல்லது என்றும் அவர் மேலும் கூறினார்.
அத்துடன் அவர், குவாங்ஜுவும் தெற்கு ஜியோல்லாவும் ஒன்றிணைந்தால், மக்கள்தொகை வீழ்ச்சியை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை சட்டமாக்குவோம் என்றும், ஏனைய அனைத்து விடயங்களும் தோல்வியுற்றால், இலங்கை அல்லது வியட்நாமில் இருந்து இளம் பெண்களை இறக்குமதி செய்து, கிராமப்புறங்களில் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் செய்து வைக்க சிறப்பு நடவடிக்கைகளைத் தயாரிக்க வேண்டும் என்றும் முன்மொழிந்தார்.
இளம் பெண்களை இறக்குமதி செய்வது குறித்து மேயர் கிம் கூறியதை அடுத்து, அரங்கில் சிரிப்பு எழுந்தது.
எனினும் அந்தக் கருத்தை விமர்சிக்கும் வகையில் மேயர் காங் கைகளை அசைத்து தனது பதிலைத் தொடங்கினார்.
2004 ஆம் ஆண்டில், நான் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, முதல் குறைந்த பிறப்பு விகிதம் மற்றும் வயதான சமூக அடிப்படைச் சட்டம் இயற்றப்பட்டது.
ஆனால் பல தசாப்தங்களாக முதலீடு செய்த போதிலும், அது சிறப்பாக செயல்படவில்லை.
இதற்கு பல்வேறு தீர்வுகள் இருக்கலாம், ஆனால் திருமணத்திற்காக வெளிநாட்டினரை இறக்குமதி செய்யும் யோசனை தவறானது.
இந்தப் பகுதியில் தொழில்கள் நிறுவப்பட்டால் மட்டுமே பிறப்பு விகிதமும் மக்கள்தொகையும் அதிகரிக்கும்.
எனவே, தொழில்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.












