வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தது தொடர்பான புகார், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று டெல்லி நீதிமன்றத்தில் சோனியா காந்தி பதில் அளித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே தனது பெயரை முறைகேடாக வாக்காளர் பட்டியலில் சேர்த்ததாகக் கூறி, வழக்கறிஞர் விகாஸ் திரிபாதி தாக்கல் செய்த மனுவை டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் திரிபாதி சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு சோனியா காந்திக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, சோனியா காந்தி தாக்கல் செய்த பதில் மனுவில்,
வாக்காளர் பட்டியலில் எனது பெயர் முறைகேடாக சேர்க்கப்படிருப்பதாகக் கூறுவது தவறானது. இந்தப் புகார் அடிப்படை ஆதாரமற்றது. அரசியல் உள்நோக்கம் கொண்டது மற்றும் தவறாக வழிநடத்துவது என்று கூறியுள்ளார்.
















