வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஒரு பெண்உட்பட மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மூன்று நாட்களுக்கு முன் வவுனியா, சதொச வீதியில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
திருடப்பட்ட மோட்டார்சைக்கிளின் உரிமையாளர் , வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்ததுடன், குறித்த முறைப்பாட்டுக்கமைய, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.எஸ்.வீரத்தின அவர்களின் வழிகாட்டலில், வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன
இதன்போது இரணை இலுப்பக்குளம்மடு பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய கணவர், 25 வயதுடைய மனைவி, 31வயதுடைய , மனைவியின் மைத்துனர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரூபாய் மூன்று இலட்சம் பெருமதியான மோட்டார்சைக்கிள் மீட்கப்பட்டது.
அத்துன், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் , நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்














