மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டதைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள ஸ்டான்ஸ்டெட் (Stansted) விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் புறப்படும் தனியார் விமானங்கள் குறித்த தகவல்களை பிரிட்டிஷ் பொலிஸார் மதிப்பீடு செய்து வருகின்றனர்.
எனினும், இந்த நடவடிக்கை குறித்து இன்னும் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையடுத்து முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுன் (Gordon Brown ) உள்ளிட்ட உயர்மட்ட நபர்களிடமிருந்து பிரிட்டிஷ் எல்லைகளுக்குள் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியின் நடமாட்டத்தை ஆராய இங்கிலாந்து அதிகாரிகளுக்கு அழுத்தம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டுகளின் முற்பகுதிக்கும் 2018 ஆம் ஆண்டுக்கும் இடையில் இங்கிலாந்து விமான நிலையங்களுக்கு வந்த அல்லது புறப்பட்ட எப்ஸ்டீனுடன் தொடர்புடைய 87 விமானங்களை கடந்த ஆண்டு டிசம்பரில் பிபிசி விசாரணை அடையாளம் கண்டதை அடுத்து இந்த ஆய்வு வந்துள்ளது.
அந்த விசாரணைகளில் கடத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படும் மூன்று பிரிட்டிஷ் பெண்கள், எப்ஸ்டீனின் விமானப் பதிவுகளில் இடம்பெற்றுள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் கோர்டன் பிரவுன், பாதிக்கப்பட்டவர்கள் இங்கிலாந்து வழியாக கடத்தப்பட்டார்களா என்பதை அவசரமாக மறுபரிசீலனை செய்யுமாறு பொலிஸாரை வலியுறுத்தினார்.
மேலும், ஸ்டான்ஸ்டெட் விமான நிலையம் எப்ஸ்டீனுக்கு ஒரு விமானத்திலிருந்து மற்றைய விமானத்துக்கு பெண்களை மாற்றுவதற்கு முக்கிய தளமாக செயற்பட்டதாகவும் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.















