மஹியங்கனை – மெதஓயா பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மாப்பாகடவெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட மின்சார கம்பி தாக்கியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு, சட்டவிரோதமாக மின்சார கம்பிகளை கட்டியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














