பரிசில் இளம் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கனரக வாகனம் ஒன்றுடன் மோதிய அவர், படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
பரிசின் வடக்குப் பகுதியான 10 ஆம் வட்டாரத்தில் நேற்று , குறித்த பெண் Barbès-Rochechouart நிலையம் அருகே துவிச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், கனரக வாகனம் ஒன்றுக்குள் எதிர்பாராமல் சிக்கியுள்ளார்.
படுகாயமடைந்த அப்பெண், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளதுடன், 20 வயதுடைய அப்பெண் விபத்தில் உயிரிழந்தமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
















