இங்கிலாந்தில் மாணவர் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வருமான வரம்பு (threshold) மூன்று ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டுள்ளது.
இதனால் தொழிலாளர்கள் அதிக தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவதால், ஆளும் தொழிலாளர் கட்சி (Labour) தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களிடமிருந்தே மீண்டும் ஒரு எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது.
இங்கிலாந்தில் உள்ள மில்லியன் கணக்கான பட்டதாரிகளின் நலன் கருதி மாணவர் கடன் முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தால், அமைச்சர்களுக்கு அது ஒரு பெரிய அரசியல் வெற்றியாக அமையும் எனவும் அரசியல் காட்சிகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த கடன் திட்டத்தால் 2012 முதல் 2023 வரை பல்கலைக்கழகப் படிப்பைத் தொடங்கியவர்கள் பாதிக்கப்படுவதுடன் பட்டதாரிகள் 28,470-பவுண்டுக்கு மேல் வருமானம் ஈட்டினால், அதில் 9%-ஐத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
இந்நிலையில் ஆயிரக்கணக்கான பவுண்டுகளைத் திருப்பிச் செலுத்திய பின்னரும், பல பட்டதாரிகளின் கடன் தொகை குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்வதுதான் தற்போதுள்ள பிரச்சியாக கூறுகின்றனர்.
கடந்த நவம்பரில் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) வெளியிட்ட வரவுசெலவுத் திட்டத்தில் (Budget), இங்கிலாந்தில் கடன் திருப்பிச் செலுத்தும் வரம்பு ஏப்ரல் 2027 முதல் மூன்று ஆண்டுகளுக்கு முடக்கப்படும் என்று அறிவித்தார்.
ஆனால், வேல்ஸ் (Welsh) அரசாங்கம் இந்த முடிவைப் பின்பற்றப்போவதில்லை என்று அறிவித்துள்ள்ள நிலையில் இதனால், பணவீக்கத்திற்கு ஏற்ப வருமான வரம்பு உயர்த்தப்படாததால், தொழிலாளர்கள் எதிர்பார்த்ததை விட அதிக தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும் இதனால் பட்டதாரிகள் உட்பட பலரும் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் என தெரிவித்து தொழிலாளர் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஏனைய கட்சிகளும் களமிறங்கியுள்ளன.
இதேவேளை, கான்சர்வேடிவ் கட்சி வட்டி விகிதத்தைக் குறைக்கப்போவதாகக் கூறியுள்ளது.
லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி இந்த முறையின் நியாயத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்போவதாக உறுதியளித்துள்ளது.
பசுமைக் கட்சி (Greens) கல்விக்கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யவும், பழைய கடன்களைத் தள்ளுபடி செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளது.
இவற்றின் மத்தியில், கல்வி அமைச்சர் இந்த விவகாரத்தில் முன்னுரிமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


















