நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் ஊடாக 640 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
இதன்போது 27,567 பேர் பொலிசாரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் குற்றங்கள் தொடர்பாக நேரடியாக அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள் 26 கைதாகியுள்ளதுடன் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட 369 பேரும் கைதாகினர்.
மேலும் மது போதையில் வாகனம் ஓட்டியதற்காக 308 பேரும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக 77 பேரும் கைது செய்யப்பட்டனர்.ஏனைய போக்குவரத்து குற்றங்களுக்காக 4,153 பேர் கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.













