பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் இரண்டு கணனி அறைகளும் கடந்த வௌ்ள அனர்த்தத்தின் போது கடுமையாகப் பாதிக்கப்படிருந்தன.
அவற்றில் ஒன்று தற்போது புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மேற்படி பிரிவில் இருந்த அனைத்து கணனிகளும் பழுதடைந்த காரணத்தால் மாணவர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர்.
இதனை நிவர்த்தி செய்ய பிரபல தனியார் கணனி நிறுவனம் ஒன்று முன்வந்து 100 கணனிகளை இலவசமாக வழங்கியது.
மேற்படி கணனி கூட திறப்பு விழாவில் பல்கலைக்கழக உபவேந்தர் ட்ரன்ஸ் மதுஜித் பிரதம அதிதியாகக் கலந்து அதனைத் திறந்துவைத்தார்.













