மனித குடியேற்றத்திற்கு அருகாமையில் பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று மாலை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய , சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டுதலின் பேரில் சாய்ந்தமருது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுற்றுச்சூழல் பிரிவிற்கு பொறுப்பான சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரி மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் இணைந்து சம்பந்தப்பட்ட இடத்தில் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதன் போது மனித குடியேற்றத்திற்கு பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகளை வளர்த்து வந்த இடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் இதற்கு தொடர்புடைய நபருக்கு எதிராக பொதுமக்கள் தொல்லை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
குறித்த விடயமானது அசௌகரியங்களும் தொந்தரவுகளும் அயல் வீட்டாருக்கு ஏற்பட்டமை தொடர்பாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது


















